Monday, July 13, 2009

ஆடு நிற்குமா?


இலவசம் என்றால் முந்துவீர்களா?

விவசாய நண்பர்களே ஆடு வளர்பது பற்றிய இலவசப் பயிற்சி இன்று ‘இந்து’ நாள் இதழில் சரவணம்பட்டியில் நாளையும் அதற்கு மறு நாளும் நடப்பதாக அறிவித்து அதற்கு முன் பதிவு செய்யும் படி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த எண்ணை இன்று 13-7-2009 தொடர்வு கொண்ட போது முன் பதிவுகள் முடிந்து விட்டதாகவும் 70 பேர் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்வார்கள் என்ற தகவலை கால்நடை பல்கலைக் கழகத்தார் தெறிவித்தனர். அதனால் எதிலும் முந்துங்கள். அடுத்த பயிற்சிக்காக.

இதே போன்று அடுத்த ஆடு வளர்க்கும் பயிற்சி அக்டோபர் மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் நடக்கவிருப்பதாகச் சொன்னார்கள். அதனால் விடுபட்டவர்கள் அந்தத் தேதிக்காக தற்பொழுதே பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். அதே தொலை பேசி எண்தான். 0422-2669965., கோவை.
‘முயற்சி திருவினையாக்கும்.’
நன்றி.
-------------------------------------------(தொடரும்)

Sunday, July 12, 2009

ஆடு வளர்க்கலாமே!


Free training in goat farming.
The Veterinary University Training and Research Centre here will offer a free intensive training programme in goat farming on July 14 and 15.

According to a release, the programme will benefit farmers and entrepreneurs involved in livestock farming and also those of poor and landless labourers.

The training is expected to make existing marketing of live goats and goat meat is profitable for producers. Those interested can contact the centre at Kalappati Pirivu, Saravampatti P.O. or call 0422-2669965, for details and registration.
(Thank to THE HINDU )
அன்பார்ந்த விவசாயப் பெருமக்களே.
ஆடு வளர்ப்புப் பற்றி சரவணம்பட்டியில் வரும் 14,15-7-2009 தேதிகளில் கால்நடை பல்கலைக்கழகம் சார்பில் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது அது சம்பந்தமாக விளக்கம் தெரியவும் முன் பதிவுக்கும், தொலை பேசி எண்-0422-2669965 தொடர்பு கொள்ளவும். நன்றி.
--------------------------------------------------(தொடரும்)

Thursday, July 9, 2009

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரிவு.


இன்று 6-7-2009 காலை கோவை கோடீசியா ‘டி’ ஹாலில் மத்திய மாநில அரசால் குறு, சிறு மற்றும் தடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானிய தொகை பற்றிய விளிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு தொடங்கிற்று. அதற்கு திரு.டி.காந்திகுமார் தலைவர் TANSTIA சென்னை அவர்கள் தலைமை தாங்கினார். திரு.பன்னீர்செல்வம், திரு.பழனிவேல், திரு அசோகன், திரு.ராமமூர்த்தி, திரு.சதுர்வேதி, திரு.சௌடையன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். மானியம் பெருவதில் உள்ள சிரமங்கள், வங்கிகளின் அலட்சியம் பற்றியும் கூறினார்கள். திரு.கண்ணன் அவர்கள் நன்றி கூறினார்.
அதைப்பற்றிய சிறு குறிப்பு மட்டும்.
இந்திய அரசு சமீபத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம்-2006 ஐ இயற்றியதன் மூலம் ‘சிறு தொழில் பிரிவு’ என்பது ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரிவு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நிறுவனப்பிரிவுக்கு மூக்கியத்துவம் அளிக்கப்பட்டதோடு நடுத்தர தொழில் நிறுவனங்களும் இப்பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது.
முதலீட்டு மதிப்பின் அடிப்படையில்
குறு உற்பத்தி நிறுவனங்கள் ரூ.25 லட்சம் வரை.
சிறு உற்பத்தி நிறுவனங்கள் ரூ.25 லத்சத்திற்கு மேல் 5 கோடி வரை
நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் ரூ.5 கோடிக்கு மேல் 10 கோடி வரை.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கையின் தேவை.

உலகமயமாக்கல் மற்றும் அதைத் தொடர்ந்த பொருளாதார சீர்திருத்தம் ஆகியவற்றின் விளைவாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் வய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. வர்த்தகத் தடைகள் குறைப்பு, தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் தகவல் பறிமாற்ற வசதி ஆகிய காரணங்களால் தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களியும், சேவைகளியும் உலகில் எப்பகுதியில் இருந்தும் மலிவான விலையில் திறன்மிகு ஆதாரங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.உலக மயமாக்கல் மற்றும், அதைத் தொடர்ந்து சந்தையில் நிலவும் போட்டி அதகரித்திருப்பதை கருத்திற் கொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான கொள்கைகள் வகுக்கப்படல் வேண்டும். மாறிவரும் சூழ்நிலைக் கேட்ப குறு, சறி மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தம்மை தயார் படுத்திக்கொள்ளல் அவசியமாகிறது.

தலைப்புகள்.-----------------------------------------------------
கொள்கை சார் நடவடிக்கைகள்.--------------------------
அடிப்படை கட்டமைப்பு வசதி அளித்தல்.------------
ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்பேட்டைகளை மேம்படுத்துதல்.------------------------------------------
புதிய தொழில் பேட்டைகள் நிறுவுதல்.------------------
அடுக்குமாடி தொழிற்பேட்டைகளை அமைத்தல்.-----
பத்திரப் பதவு கட்டண சலுகை.----------------------------
தனியார் துறையில் மேம்படுத்தப் படும் தொழற் பேட்டைகள்.
மூலப்பொருள் வினையோகம்.--------------------------------
நேரடி ஊக்குவிப்பு மானிய உதவிகள்.---------------------
மூலதன மானியம்.------------------------------------------------
குறைந்த மின் அழுத்த மின் மானியம்.--------------------
மதிப்புக் கூட்டு வரிக்கு ஈடான மானியம்.----------------
முத்திரை கட்டண விலக்கு.--------------------------------------
பின்தங்கிய பகிதிகளில் அமைக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கான உதவிகள்.
மூலதன மானியம்.------------------------------------------------------
வேலைவாய்ப்பு பெருக்க மானியம்.--------------------------------
குறிப்பிட்ட வகை தொழில் முனைவோருக்கான கூடுதல் மூலதன மானியம். --------------------------
மாசற்ற மற்றும் சுற்றுச் சூழலுக்கு இயைந்த தொழில் நுட்பத்திற்கான கூடுதல் மூலதன மானியம்.
குறைந்த அழுத்த மின் மானியம்.---------------------------------
வேளாண் சார் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க மானிய உதவிகள்.---------------------------------------
சிறப்பு வகை உற்பத்திநிறுவனங்களுக்கான மூலதன மானியம்.----------------------------------------------
மூலதனமானியம் பெற தகுதியில்லாத நிறுவனங்கள்-தொழில்கள்.------------------------------------------
ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி கொள்கை.
தொழில் நுட்ப ஆதரவு.----------------------------------------
தொழில் நுட்ப மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நவீனப்படுத்தலுக்கான உதவி.-----------------------
சிறு கருவி மையங்கள்--------------------------------------------
உற்பத்தி நிறுவனங்களின் போட்டியிடும் திறமையை அதிகறித்தல்.-----------------------------------------
தொழில் குழும மேம்பாட்டுத் திட்டம்.---------------------
பின்முனை வட்டி மானியம்.-----------------------------------
தொழில் நுட்ப வளர்ச்சி நிதி.------------------------------------
தொழில் நுட்ப வணிக சேவை வசதி வளர்பகங்கள்.
அறிவுசார் சொத்துரிமைக்கான மானிய உதவி.---------------
குறிப்பிட்ட வகை தொழில்களுக்கான தொழில் நுட்ப மேம்பாட்டுத் திட்டம்.------------------------------
சான்றளித்தல் மற்றும் பரிசோதனை.---------------------------
செயல்திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி.---------------------
தகவல் மற்றும்சந்தை ஆதரவு.----------------------------------
சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவு, கருத்தரங்குகள் மற்றும் பொருட்காட்சிகள்.---------------------------
கட்டுப்பாடுகள் நீக்கம் மற்றும் எழிதாக்குதல்.
பொன்றவை.-----------------------------------------------------------
-------------------------------------------(தொடரும்)

Wednesday, July 1, 2009

மரம் வளர்க்க..........?


நட்சத்திரங்களும் அதற்குண்டான மரங்களும்.

நட்சத்திரம்.----------------------------மரம்.
1. அஸ்வினி ---------------------எட்டி மரம்.
2. பரணி -------------------------நெல்லி மரம்.
3. கார்த்திகை --------------------அத்தி மரம்.
4. ரோகினி ------------------------நாவல் மரம்.
5. மிருக சீரிடம் -----------------கருங்காலி மரம்.
6. திருவாதிரை -------------------செங்குரு (செம்மரம்).
7. புனர்பூசம் -------------------------மூங்கில் மரம்.
8. பூசம் --------------------------------அரச மரம்.
9. ஆயில்யம் -----------------------புன்னை மரம்.
10. மகம் -------------------------------ஆல மரம்.
11. பூரம் ---------------------------------பலா மரம்.
12. உத்திரம் ----------------------------அலரி மரம்.
13. அஸ்தம் -----------------------------வேலம் மரம்
14. சித்திரை ------------------------------வில்வ மரம்.
15. சுவாதி ---------------------------------மருது மரம்.
16. விசாகம் -------------------------------விலா மரம்.
17. அனுஷம் ------------------------------மகிழம் மரம்.
18. கேட்டை -------------------------------பிராய்(குட்டி பலா)
19. மூலம் -----------------------------------மா மரம்.
20. பூராடம் -----------------------------------வஞ்சிமரம்.
21. உத்திராடம் --------------------------------சக்கைப் பலா மரம்.
22. திருவோணம் -----------------------------வெள்ளெருக்கு மரம்.
23. அவிட்டம் -----------------------------------வன்னி மரம்.
24. சதயம் -----------------------------------------கடம்ப மரம்.
25. பூரட்டாதி -------------------------------------தேமா (கரு மருது)
26. உத்திரட்டாதி ----------------------------------வேப்ப மரம்.
27. ரேவதி -------------------------------------------இலுப்பை மரம்.
==============================================
இவை யாவும் செல்வ செழிப்போடு வாழ வழர்க்கப்பட வேண்டிய மரங்கள்.
(நன்றி திரு.ஆர்.குப்புசேது)
-----------------------------------------------(தொடரும்)