Saturday, January 17, 2009

விவசாயிகளுக்கான (மரம்) ஒரு நாள் கருத்தரங்கு


விவசாயிகளுக்கான (மரம்) ஒரு நாள் கருத்தரங்கு.

விவசாய அன்பர்களே நான் 29-12-2008 ம் நாள் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழக வனக்கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையத்தில் (தொலை பேசி 04254-222010) ஒரு நாள் பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது அதில் கலந்து கொண்டேன். அதற்கு 11 மாவட்டத்தைச் சேர்ந்த 127 விவசயிகள் பங்கேற்றார்கள். அந்தப் பயிற்சியின் பெயர் ‘NATIONAL AGRICULAURAL INNVATION PROJECT’ (NAIP) என்பது. அதில் வனமல்லாத நிலங்களில் (தரிசு) மரங்களை வளர்த்து தமிழ் நாட்டுத் தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த முறையில் விற்றுப் பயன் அடைதல் பற்றியது. அதற்காக சேசாய் பேப்பர் மில், தமிழ்நாடு காகிதத்தொழிற்சாலை மற்றும் வாசன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து அதிகாரிகள் வந்து விளக்கம் அளித்தார்கள். வனக்கல்லூரிகளில் உள்ள விஞ்ஞானிகள் டாக்டர் பார்த்தீபன்,(9443505844) டாக்டர் சுரேஸ், டாக்டர் நடராஜன் மற்றும் டாக்டர் கிருஷ்ணவேணி ஆகியோர் சவுக்கு, தைலமரம் மற்றும் பெருமரம் பற்றி நாற்று உற்பத்தி முதல் மரம் வெட்டும் வரை முழுவிழக்கம் அளித்தார்கள். மிக்க பயனுடையதாக இருந்தது. தற்போது 5 மாவட்டங்களைத் தேர்வு செய்து அதில் 200 விவசாயிகளுக்கு ஒப்பந்த முறை சாகுபடியில் பயன் அளிக்க உள்ளார்கள். அந்த மூன்று மரங்களைப் பற்றி விபரங்கள் அளிக்க உள்ளேன். சவுக்குமரம், தைலமரம், மற்றும் பெருமரம் பற்றிய சாகுபடியும் நிர்வாகம் பற்றி தெறிந்து கொள்வோம்.

சவுக்குமரம்.

சவுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசோரினா அக்குஸ்டிபோலியா இதை வணிகப்பெயராக கரிமரம் என்றும் சொல்வர். இந்த மரம் 40 மீ. உயரம் வரை வளரும். சுற்றளவு 180 செ.மீ. கொண்டதாக இருக்கும். இது கடற்கரைப்பகுதிகளில் நன்கு வளரும், வேறு இடங்களில் வரட்சியைத் தாங்கியும் வளர்க்கூடியது. இது மணல் கலந்த செம்மண், செம்மண், உப்புமண், சுண்ணாம்பு மற்றும் அமிலமண் பகுதிகளில் வளரும். இதற்கு நைட்ரஜன் ஏற்கனவே இருப்பதால் தேவைப்படாது. இதை விதை மூலம் இனப்பெருக்கம் செய்வதைவிட விதையில்லா இனப்பெருக்கம் என்ற கன்ற வழி பெருக்கம் (Clonal propagation) சிறந்ததாகும். நாற்றுக்கள் தயார் செய்து 4 x 4 லிருந்து 6 x 6 அடி அளவு வைத்து நடுவது நல்லது. இடைவெளி 0.80 லிருந்து 1 மீட்டர் வரை நடலாம். முறைப்படி உரம் இட்டு தண்ணீர் பாச்ச வேண்டும். மரத்தின் முக்கால் பகுதிக்கு கீழ் உள்ள பக்க க்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் 6 - 12 மாதங்களில் நல்ல கழிகள் கிடைக்க வழிவகை செய்யலாம். பயிர் பாதுகாப்புக் கையாள வேண்டும்.

சவுக்கின் அனைத்துப்பகுதிகளும் பயன்படுபவை ஒரு எக்டருக்கு 125 லிருந்து 150 டன் மூன்று ஆண்டுகளுக்கு 4 x 4 அடி இடைவெளியிலோ 5 x 5 இடைவெளியிலோ நடுவதன் மூலம் பெறலாம். இந்த வளைச்சலை சிறந்த நீர்நிர்வாகம், உர நிர்வாகம் மூலமும் மேம்படுத்தலாம்.

சவுக்கு ஓராண்டு பயிராக இருக்கும் போது வேளாண்மைப் பயிரகளில் குறிப்பாக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்ப்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்து பயிரான எள் கடின மண்ணில் பயிறு வகைகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம். இம்மரம் மண் ஆரிப்பைப் தடுக்கும். இதன் இரசக்தி 4950 கலோரி கிலோவுக்கு.

சவுக்குமரத்தை சாகுபடி செய்தால் பதிவு செய்தல் மரம் உள்ள இடத்தில் வந்து அறுவடை செய்து டிரேன்ஸ்போர்ட் ஆகியவை நிர்வாகமே இலவசமாக ஏற்றுக்கொள்ளும் விலை டன்னுக்கு ரூ.1800-00 வீதம் எடுத்துக் கொள்வார்கள்.
---------------------------------------------------------------------------

தைலமரம்.

இது யுகலிப்டஸ் மிர்டேசியே (Myrtacea) குடும்பவகை மரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்ட அதிக விளைச்சலைத் தரும் எரிபொருள். மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளிக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிடப் பட்டது.

தைலமரம் விரைவாகவும், உயரமாகவும் (20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு வரை வளர்க்கூடியது. இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இம்மரத்தின் இலைகள் கடினத்தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்புடையவை. இம்மரமானது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிங் பூக்கும். தைல மரம் வண்டல், சரளை, மற்றும் சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரக் கூடியது.

இதை விதை மூலம் இனப்பெருக்கம் செய்வதைவிட விதையில்லா இனப்பெருக்கம் என்ற கன்ற வழி பெருக்கம் (Clonal propagation) சிறந்ததாகும். நாற்றுக்கள் தயார் செய்து 3 மீ x 1.5 மீ லிருந்து 3 மீ x 2 மீ அளவு இடைவெளி வைத்து நடுவது நல்லது. 4-6 ஆணைடுகளிங் அறுவடை செய்யலாம். மரம் வெட்டிய பின் மறுதாம்புகள் வளரும் 4-5 தாம்புகள்த் தவிர மற்ற அனைத்துத் தாம்புகளையும் நீக்கிவிட வேண்டும். இரண்டாவது தாம்புடன் தோண்டிவிடலாம். மேலும் விட்டால் வீரியம் இருக்காது.

பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தும் முறையில்-தண்டு துளைப்பான், இலை மிடிச்சு, கரையான், தண்டு துரு நோய், அளஞ்சிவப்பு நிறநோய் ஊதா தோய் மற்றும் பழுப்பு நோய் ஆகியவைகளைத் தடுக்க மருந்துகளைப் பயன்படுத வேண்டும்.

நான்கு முதல் ஐந்து வருடங்களில் தைல மரம் அறுவடை செய்யப்படும். நல்ல மண் வளம், நீர் வசதியுள்ள இடங்களில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்கும். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 4-5 ஆண்டுகள் இடைவெளியில் ரூ.75,000-00 வரை வருவாய் பெறலாம்.

தைல மரத்தை சாகுபடி செய்தால் பதிவு செய்தல் மரம் உள்ள இடத்தில் வந்து அறுவடை செய்து டிரேன்ஸ்போர்ட் ஆகியவை நிர்வாகமே இலவசமாக ஏற்றுக்கொள்ளும் விலை டன்னுக்கு ரூ.2000-00 வீதம் கொடுப்பார்கள்.

பெரு மரம்.

பீநாரி என்றழைக்கப்படும் தீக்குச்சி மரத்தின் தாவரவியல் பெயர் அய்லாந்தஸ் எக்செல்சா (Ailanthus excelsa) இந்த மரம் சைமரூபியேசி என்ற தாவரக்குடும்பத்தை சார்ந்தது. மொலுகஸ் தீவில் இதே இனத்தைச் சார்ந்த மற்றொரு மரத்திற்கு இடப்பட்ட பெயரான அய்லாந்தஸ் இம்மரத்திற்கும் சூடப்பட்டுள்ளது. இம்மரம் வறண்ட பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். நம் நாட்டில் குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப் ஒரிசா மற்றும் உத்திரப்பரதேசம் ஆகிய மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் எல்லா பகுதிகளிலும் இம்மரதை வளர்த்து பயன் பெறலாம்.

பெருமரத்தின் இலை தழைகளை கால்நடை தீவனமாகப் பயன்படுத்தலாம். இம்மரத்தின் தழையைக் கொண்டு மல்பெரி பட்டுப்புழு வளர்க்கலாம். இவற்றிக்கெல்லாம் மேலாக தீப்பெட்டி மற்றும் தீகுச்சிகள் செய்திட இம்மரம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இம்மரம் போதியளவு இல்லாததால், தமிழ்நாட்டிலுள்ள தீப்பெட்டித் தொழிற் சாலைகளுக்குத் தேவையான அய்லாந்தஸ் மரத்தின் குச்சிகள் அண்டை மாநிலங்களான கேரளா, குஜராத், இராஜஸ்த்தான் போன்ற வட மாநிலங்களிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டில் இம்மரத்தை நட்டு ஏன் மேற்படி பயனை நாம் அடையக்கூடாது இனி இம்மரத்தின் சாகுபடி விழைச்சல் விவரங்கள் பற்றி கீழே காண்போம்.

மரச்சாகுபடி குறிப்புகள்.

தமிழகத்தில் இம்மரத்தை கடற்கரை பகுதிகளிலிருந்து மெற்கு மலை தொடர்ச்சியின் அடிவாரத்திற்கு இடைப்பட்ட எல்லாப் பகுதிகளிலும் வளர்க்கலாம். மானாவரிப்பகுதிகள், செம்மண், சரளைப் பகுதிகளிலும் சுண்ணாம்பு நிலங்கள், கடற்கரை மற்றும் ஆற்றோறப்பகுதிகளிலும் இம்மரத்தை வளர்க்கலாம். காற்று அதிகமாகக்காணப்படும் பகுதியில் இம்மரங்கள் வேரோடு அல்லது மரங்கள் பாதியில் முறிந்து விழும் வாய்ப்புள்ளது. எனவே காற்று அதிகமுள்ள பகுதியில் இம்மரத்தை வளர்ப்பதைத்தவிர்க்கலாம். மானாவாரி விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் தோட்டங்களின் வேலி ஓரங்களிலும் இம்மரத்தை வளர்க்கலாம். தீப்பெட்டி தொழிலுக்குப் பயன்படுத்த இம்மரத்தை வெட்டினால் உடனே மரத்தை தீப்பட்டித் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் மேற்படி உபயோகத்திற்கு பயன் படுத்த முடியாத நிலை உருவாகலாம்.

விதை சேகரிப்பு.

மாசி, பங்குனி (பிப்ரவரி, ஏப்ரல்) மாதங்களில் நாற்றுக்களை முற்றிய நிலையில் மரத்திலிருந்தே பறித்திட வேண்டும். பின் நாற்றுக்களை நன்கு உலர்த்தி தடிகொண்டு அடித்த விதைகள் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ எடையில் சுமார் 15000 விதைகள் கிடைக்கும். விதையின் மேல் தோலை நீக்கி விதையை உடனே ஊற்றும் பொழுது முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும்.

நாற்றங்கால்.

10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 15 செ.மீட்டர் உயரமுள்ள தாய்பாத்தியில் விதைகளை பரப்பி முளைக்கச்செய்ய வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 15 கிராம் அளவில் விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த 10-12 நாட்களில் விதைகள் முளைக்க துவங்கி 50 நாட்ள் வரை முளைப்பு நீடிக்கும். விதையின் முளைப்புத்திறன் சுமார் 10-20 சதவிகிதமாகும் விதைகள் முளைத்து சுமார் 2 அங்குலம் உயரம் வரை வளர்ந்த நாற்றுக்களை சரிவிகிதத்தில் மண் கலவை நிரப்பப்பட்ட பாலிதீன் பைகளில் நட வேண்டும். விதைகளை நேரடியாகவும் பாலிதீன் பைகளிலும் ஊன்றலாம். இம்மரக்கன்றுகளை வெட்டிய மரஙிகளிருந்து கணுக்களைக் கொண்டும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.

நடவு.

சுமார் ஆறுமாதம் வளர்ந்த மரக்கன்றுகளை நிலங்களில் நடவு செய்யலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல் விவசாய நிலங்களின் வரப்பு ஓரங்களிலும், தேவைப்பட்டால் தனித்தோட்டமாகவும் சாகுபடி செய்யலாம். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் வருடத்தின் எக்காலத்திலும் இம்மரக்கன்றுகளை நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவரி நிலங்களில் பருவ மழைகாலங்களின் ஆரம்பத்தில் நடவு செய்வது நன்று 60 செ.மீ.கன அளவுள்ள குழிகளை மானாவரிப்பகுதிகளில்
4 x 4 மீட்டர் மற்றும் 3 x 3 மீட்டர் இடைவெளியில் மரக்கன்றுகளை நடவு செய்யலாம். குழிகளில் சுமார் அரைக் கிலோ மண்புழு உரம் 25 கிராம் வேர் வளர்ச்சி பூசணம் 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை பாதியளவு நல்ல மண் மற்றும் தொழு உரங்களால் நிரப்பி பின் வளர்க்க விரும்பினால் 3 மீட்டர் இடைவெளியில் மூன்று மரங்கள் வீதம் ஒவ்வொரு வரிசையிலும் நட்டு வளர்க்கலாம். இம்முறையைக் கடைபிடிப்பதன் மூலம் தண்ணீர் மழைகாலங்களில் சேகரிக்கப்பட்டு மரங்கள் வளர்வதற்கு உதவுகிறது. இம்முறையின் மூலம் ஏக்கருக்கு 444 மரங்கள் வரை வளர்த்து பயன் பெறலாம்.

மகசூல்.

மரங்கள் நடவு செய்த சுமார் 6-8 ஆண்டுகளில் மரங்களை அறுவடை செய்யலாம். தரிசு நிலத்தில் வளர்க்கப்பட்ட ஒரு மரத்திலிருந்து சுமார் 250 கிலோ எடை மரமும், நீர்வளமிக்க நிலத்தில் வளர்க்கப்பட்ட மரத்திலிருந்து சுமார் 500 கிலோ எடை மரமும் சுமார்
6-8 வருடங்கள் கழித்து கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு டன் மரத்தின் சராசரி மதிப்பு சுமார் ரூபாய் 1500 லிருந்து 1600 வரை தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கலாம். குடியேத்தம் வாசன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒப்பந்த சாகுபடிக்கும் வங்கிகள் மூலம் கடன் வசதியையும் செய்து கொடுக்கவுள்ளது.

மேலு ஒரு தகவல் -: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரைத் தாலூகாவில் ஓலைப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு 450 டன் மரம், குச்சிகள் எரிபொருளுக்காக கீழ்கண்ட கம்பனிக்குத் தேவைப்படுகின்றது. நேரடி விற்பனை, உடனே கையில் செக் கொடுத்து விடுவார்கள் என்று திரு சாமுவேல் அந்த நிறுவனத்திலிருந்து வந்திருந்தவர் கூறினார் அவரது தொலை பேசி -: 9843318401 மற்றும்
-:9445006713.
நிறுவனம்:-
“SYNERGY SHAKTHI CAPTIVE ENERGY SYSTEM”

---------------------------------(விவசாயம் தொடரும்)

Thursday, January 8, 2009

மூங்கில் பயிர் பாதுகாப்பு.



மூங்கில் பயிர் பாதுகாப்பு.

பூச்சிகள் தாக்குதல் :-
கரையான்கள் :- வேர் பகுதிகளை கடித்து சேதத்தை உண்டாக்குகிறது.

வெள்ளைப் புழுக்கள் :- மண்ணிற்கு ஆடியில் இருக்கும் இவ்வண்டின் புழுக்கள் கிழங்கு பகுதிகளை கடிப்பதால் மரம் வறண்டு விடும்.

மடக்குப் புழு.

இப்புழுக்கள் இளநிலைக் காலங்களில் இலைகளை துளைத்தும் சற்றே வளர்ந்த பின் நீள்வாக்கில் மடக்கியும் இலைகளைத்தின்று சேதம் விளைவிக்கின்றன. மழை காலங்களில் இதன் சேதம் அதிகமாக இருக்கும்.


வெட்டுக் கிளிகள்.

இலைகளை கடித்து சேதம் உண்டாக்குகிறது.

ஹிஸ்பின் துளைப்பான்.

மழைக்காலங்களில் இலை சோகை இடுக்குகளில் இடப்படும் முட்டைகள் பொறித்தவுடன் மூங்கில் கணுக்களின் மேற்பரப்பை சுரண்டிவிடும். சோகைகள் உதிர்ந்தவுடன் கணுக்களில் துளையிட்டு குடைந்து சென்று சேதத்தை உண்டாக்கும். வளர்ந்த வண்டுகள் இலைத்துளிர்கள் தின்று வாழும்.

மூங்கில் அசுவினி.

இப்பூச்சிகள் நுனி குருத்துகளில் சாற்றை உறிஞ்சி சேத த்தை உண்டாக்கும். அதிக அளவில் இப்பூச்சிகளால் வெளிப்படுத்தும் சர்கரைத்துளிகள் மரங்களிங் படியும் இடங்களில் கருநிற பூசணங்கள் படர்ந்து ஒளிச்சேர்க்கை தடைபடும்.

தூர் கூன் வண்டுகள்.

இவ்வகை வண்டுகள் நுனி குருத்துகளை கடிப்பதால் மூங்கில் வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் புழுக்கள் மூங்கிலையும் குடைந்து சேதம் ஏற்படுத்துகின்றன.

பூச்சிகள்கட்டுப்பாட்டு முறைகள்.

கரையான் மற்றும் வெள்ளைப்புழுக்கள் :-
இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஏதேனும் ஒரு குருணை மருந்தை மண்ணில் இடலாம். தூருக்கு 20 முதல் 50 கிராம் வரை இடலாம்.

இலை மடக்கு புழு மற்றும் வெட்டுக்கிளி :-
குளோரிபைரிபாஸ் 2 மில்லி லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

அசிவினி :-
டைமெதோயேட் அல்லது பாஸ்போமிடான் அல்லது மானோகுரோட்டோபாஸ் ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

மூங்கில் துளைப்பான் :-
சீரிய சாகுபடி முறைகளை மேற்கொள்வதன் மூலமும் மூங்கில் காட்டை சுத்தமாக பராமரிப்பதன் மூலமும் இப்பூச்சிகளின் தாக்குதலை தவிர்க்கலாம்.

நாவாய் பூச்சிகள் :-
இப்பூச்சிகளை கட்டுப்படுத்த டைமெதோவேட் அல்லது மீத்தைல் டெமெட்டான் ஒரு மில்லி/லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்கலாம்.

நோய்கள்

1. மூங்கில் இலையுறை கருகல் நோய் :-

இலைஉறைகளில் முதலில் பழுப்பு நிற நீர் கோர்த்த புள்ளிகள் தோன்றும். இவை மிக வேகமாக பரவி இலையுறை முழுவதும் காய்ந்து விடும். இலையுறை களிமரத்திலிருந்து எளிதில் உரித்து விடலாம். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது மூங்கில் களிகள் குருத்திலிருந்து கீழ் நோக்கி காய்ந்து விடும். இதனால் தரமான மூங்கில் உற்பத்தி பாதிக்கும்.

2. களி அழுகல் நோய்

இந்நோய் இளம் மற்றும் முதிர்ந்த மூங்கில் களிகளை தாக்குகிறது. பாதிக்கப்பட்ட மூங்கில் களிகளில் அடிபாகத்தில் முதலில் கரும்பழுப்பு மற்றும் கருப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின் வேகமாகப் பரவி தண்டுப்பகுதி பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட கழிகளில் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும்.

3. மூங்கில் கிழங்கு அழுகல் நோய்.

இரண்டு வருடங்களுக்குட்பட்ட மரங்களை இந்நோய் தாக்குகின்றது. முதலில் கழிகளின் அடிப்பகுதிகளில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி கீழ்நோக்கிப் பரவி கிழங்கினைத் தாக்கி அழுகலை உண்டாக்கும்.

4. வேர் அழுகல் நோய்.

நோய் தாக்கப்பட்ட மரங்களின் வேர்களில் அழுகலை காணலாம். பாதிக்கப்ட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து விடும். நோய் தாக்கப்பட்ட மரங்கள் மிக விரைவாகக் காய்ந்து வடும். காய்ந்த கழிகளின் அடிப்பகுதியில் காளான் தோன்றும்.

5. இலைக் கருகல் நோய்.

இலைகளில் முதலில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி காய்ந்து உதிர்ந்து விடும்.

6. துரு நோய்.

இலைகளில் முதலில் செம்பழுப்பு அல்லது சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி மஞ்சள் நிறமாக மாறு உதிர்ந்து விடும்.

7. நச்சுயிரி நோய்.

இரண்டு வகையான நச்சுயிரி நோய்கள் காணப்படுகிறது. வெளிரிய பச்சை நிற கோடுகள் இலை நரம்புகளுக்கு இணையாக இலைகளில் தோன்றும்.

நோய் தீவிரமாகும் போது இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் உதிர்ந்து விடும்.

8. சிற்றிலை நோய்.

இந்நோயின் காரணி மைக்கோபிளாஸ்மா ஆகும். இந்நோயின் தாக்குதலால் இலைகள் சிறுத்து இடைக்கணுப்பகுதி வளர்ச்சி குறைந்து கொத்துக் கொத்தாகக்காணப்படும்.

ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகள்:

1. நோய்பூச்சிகள் தாக்குதலற்ற செடிகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
2. நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
3. நோயுற்ற இலையுறைகை அகற்றி விட வேண்டும்.
4. கிழங்கு அழுகல், வேர் அழுகல் மற்றும் கழி அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த மரத்தினைச் சுற்றிலும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25 சதம் அல்லது கார்பென்டசிம் 0.1 சதம் மருந்தினை வேர்கள் நன்கு நனையும் படி மண்ணில் ஊற்ற வேண்டும்.
5. இலைக்கருகல் : மான்கோசெப் 0.25 சதம்.
6. துரு நோய் : நனையும் கந்தகம் 0.2 சதம் தெளிக்கவும்.
7. நச்சுயிரி நோய் மற்றும் சிற்றிலை நோய் தாக்கிய மரங்களை அகற்றி அழித்து விட வேண்டும்.


--------------------------------( மூங்கில் தொடரும் )