Friday, November 27, 2009

தசகவ்யா


தசகவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின்
சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும். இதனால்
பஞ்சகவ்யா மேலும் மெருகேற்றப்பட்டு நல்லபயனளிக்கிறது.
இதைப் பயிரின் மீது தெளிக்கும் போது பெரும்பாலான
பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியையும்
அதிகரிக்கின்றது.

தசகவ்யா தயாரிக்கும் முறை.


தசகவ்யா தயாரிப்பதற்கு தேவையான பூச்சிகளையும் நோய்
களையும்விரட்டக்கூடிய ஐந்து மூலிகைச் செடிகளை எடுத்துக்
கொள்ளவேண்டும். அவைகளானவை.

ஆடாதொடை (Adhatoda vasaca)1 kg.

ஊமத்தை (Datyra metal) 1 kg.

நொச்சி (Vetex negundo) 1 kg.

வெள்ளை எருக்கு (Calotropis gigantea) 1 kg.

வேப்பிலை (Azadirachta indica) 1 kg.


மேலே கூறிய தழைகளையும் பசுவின் கோமியத்தையும்
1 : 1.5 என்ற விகிதத்தில் பத்து நாட்களுக்கு பிளாஸ்டிக்
தொட்டியில் ஊரவைக்க வேண்டும். 11 நாட்கள் கழித்து
தழைதனை தனியாகப் பிரித்தெடுத்து விட்டு சாறுதனை
தசகவ்யா தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.தயாரித்த
சாறுகளை பஞ்ணகவ்யாவில் 1:3 என்ற விகிதத்தில் கலந்து
25 நாட்களிக்கு வைத்திருக்க வேண்டும். இதை ஒரு
நாளைக்கு ஒரு முறை கிளறிவிடவேண்டும். 25 நாட்
களுக்குப் பிறகு 3 சதவீதக்கரைசலைத் தெளிப்பதற்கு
பயன்படுத்தலாம்.

பயன்கள்

1. தசகவ்யா தெளிப்பதால் பஞ்சகவ்யாவின் அனைத்து
பயன்களையும் பெறுவதோடு பயிருக்கு பூச்சி மற்றும்
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கிடைக்கிறது. இதனால்
பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் தவிர்க்கப்படுகிறது.

2. பயிர், மரம் மற்றும் மரக் கன்றுகளுக்கு தழை, மணி,
சாம்பல், கால்சியம், மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிக
அளவில் கிடைக்கிறது.

3. தசகவ்ய தெளிப்பதால் காய்கறிப் பயிர்கள், மரம் மற்றும்
மரக் கன்றுகளுக்கு, பூக்கள் மற்றும் இலைகளின்
எண்ணிக்கை அதிகமாகும்.


Wednesday, November 18, 2009

பஞ்சகவ்யா.



பஞ்சகவ்யா தொடர்ச்சி

பஞ்சகவ்யா தயாரிக்கும் முறை.

தமிழ்நாட்டிலுள்ள பாரம்பரிய தொழில் நுட்பத்தில் அனுபவம்
வாய்ந்த, இயற்கை வழிச்சாகுபடியாளர்களின் சீரிய செயல்
முறைகளின் அடிப்படையில், கீழ் காணும் மூலப்பொருட்
கள் மற்றும் உற்பத்தி முறைகளைக் கொண்டு பஞ்சகவ்யா
தயாரிக்கப்படுகிறது.

20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்க தேவையான பொருட்கள்.

பசுஞ்சாணம் ------------------------- 5.0 கிலோ

பசுவின் கோமையம் ------------------ 5.0 லி

பசும்பால் ---------------------------- 2.0 லி

தயிர் -------------------------------- 2.0 லி

நெய் -------------------------------- 1.0 லி

கரும்புச்சாறு ------------------------- 3.0 லி

தென்னை இளநீர் --------------------- 3.0 லி

வாழைப்பழம் ------------------------ 2.0 கிலோ


பசுஞ்சாணிஐந்து கிலோவுடன் பசு மாட்டு நெய் ஒரு
லிட்டரைக் கலந்து, பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில்
நான்கு நாட்கள் வைத்து தினம் காலை மாலை இரு முறை
இதைப் பிசைந்து விட வேண்டும். ஐந்தாவது நாள் மற்ற
பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண் பானை
அல்லது சிமெண்டுத் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டி
யில் போட்டு நன்கு கரைத்து கலக்கி, கம்பி வலையால்
அல்லது நைலானாலான கொசுவலையை கொண்டு மூடி
நிழலில் வைக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை வீதம்
காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் கிளறிவிட
வேண்டும். இது பிராணவாயுவை பயன் படுத்தி வாழும்
நுண்ணுயிரிகளின் செயல் திறனை ஊக்குவிக்கின்றது. இந்த
முறையில் முப்பது நாட்களில் பஞ்சகவ்யா தயாராகிவிடும்.

பஞ்சகவ்யாவின் இயல்வேதிப் பண்புகளை ஆராய்ததில்
அதில் பயிருக்குத்தேவையான தழை, மணி, சாம்பல்
சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் மற்றும் பயிர்
வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம்
மற்றும் ஜிப்ரலிக் அமிலம் ஆகியவையும் இருப்பது
கண்டறியப்பட்டது. பஞ்சகவ்யாவில் கரும்புச்சாறு
வெல்லம் ஆகியவை ஒரு பாகமாக சேர்ப்பதால்
அது அமிலதன்மையுடன் உள்ளது. எனவே நொதிக்கும்
நுண்ணுயிர்களான ஈஸ்ட் மற்றும் லாக்டோபேசில்லஸ்
ஆகியவையும் பஞ்சகவயாவில் அதிகம் காணப்படு
கின்றன. லாக்டோபேசில்லஸானது அங்கக அமிலங்
கள், ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பிற நோய்
எதிர்ப்புப் பொருடகளையும் உற்பத்தி செய்கிறது.
இப்பொருட்கள் நோய்க் கிருமிகளை எதிருக்கும் திறன்
பெற்றதோடு உயிர் வளர்ச்சி ஊக்கிகளாகவும் செயல்
படுகிறது. இதோடு ஐசோபிரின் கூட்டுப் பொருட்களும்
பஞ்சகவ்யாவில் உள்ளன.

ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை உற்பத்தி செய்ய ஆகும்
செலவு சுமார் 35 முதல் 40 ரூபாய் ஆகும். மேலும்
விவசாயிகள் தங்களிடமுள்ள கால் நடைகளிலிருந்து
கிடைக்கும் பொருட்களிலிருந்து மிகப் பெரிய அளவில்
பஞ்சகவ்யாவை தயாரித்து பயன் பெற முடியும்.
பயிர்களுக்கும், மரங்களுக்கும் பஞ்சகவ்யா தெளிக்கும்
முறையானது வேறுபடுகிறது. பொதுவாக ஒரு ஏக்க
ருக்கு பயிர்களுக்கு 3.5 லிடர்ரும், மரங்களுக்கு 4.7
லிட்டரும் ஒரு தடவை தெளிப்பதற்கு தேவைப்படும்
பஞ்ணகவ்யாவை 3 சதவீதக் கரைசலாக (1 லிட்டர்
தண்ணீருக்கு 30 மில்லி பச்ணகவ்யா) கலந்து 15-30
நாட்கள் இடைவெளியில் பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
பஞ்சகவ்யாவானது ஏராளமான நுண்ணூட்ட சத்துக்
களையும் வளர்ச்சியூக்கிகளையும், நுண்ணுயிர்களையும்
மற்றும் அங்கக தனிமங்களையும் கொண்டுள்ளது.
இதுவே தாவரங்களின் அதிகப்படியான வளர்ச்சியையும்
மகசுலையும் கொடுப்பது மட்டுமல்லாமல் பயர்களையும்,
மரங்களையும், பூச்சி மற்றும் நோய்களிடமிருந்து பாது
காத்து இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத, பூச்சி மற்றும்
நோய் கொல்லியாகவும், வளர்ச்சியூக்கியாகவும் பெரும்
பங்கு வகிக்கிறது.


அடுத்து 'தசகவ்யா' தொடரும்.

Friday, November 13, 2009

பஞ்சகவ்யா.



பஞ்சகவ்யா.

கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் (IFGTB)" அக்டோபர் மாதம் 8,9 தேதிகளில் இரண்டு
நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் தரமான மரக்கன்று
உற்பத்தியில் 'பஞ்சகவ்யா' பற்றி திரு. பன்னீர் செல்வம் அளித்த
விளக்கம் பின்வருமாறு-
ந்மது முன்னோர்களின் அனுபவ அறிவானது மனித இனம் மட்டு
மின்றி விலங்கு மற்றும் தாவர இனத்தின் நலம் காக்கும் அறிவுப்
பெட்டகமாக திகழ்கிறது. விருக்சாயுர்வேதா என்பது அத்தகைய
அனுபவ அறிவு குறிப்புகளின் ஓர் தொகுப்பாகும். இது இயற்கை
சக்திகளான பஞ்சபூத த்தோடு (நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும்
ஆகாயம்) இயைந்த விவசாய் மூறைகளை வலியுறுத்துகின்றது.
பசுமை புரட்சி என்ற பெயரில் உணவு தானிய உற்பத்தியை பெருக்க
அளவற்ற இரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லிகளையும்
பயன்படுத்தியதன் விளைவாக இன்று மக்கள் அனைவரும் நோய்
எதிர்ப்பு சக்தி குறைந்து பல வியாதிகளைக்கும், பக்கவிளைவு
களுக்கும் ஆளாகி இன்னலுருகிறோம். இனி பக்கவிளைவுகள்
இன்றி நோய் எதிர்ப்பு சக்தியை பெற்று நலமாக வாழ இயற்கை
உரங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்துவது ஒன்றே
சிறந்த வழியாகும். இதில் பஞ்சகவ்யா மற்றும் தசகவ்யா
முக்கியமான பங்கினை வகிக்கின்றன.
'பஞ்ச' என்றால் ஐந்து என்று பொருள்படும். பசுவிலிருந்து
கிடைக்கும் ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால்
இதற்கு 'பஞ்சகவ்யா' என்று பெயர் வந்தது. கோயில்களில்
பிரசாதமாக அளிக்கப்பட்டு வருகின்ற பஞ்சாமிர்தம்தான்
பஞ்சகவ்யா இருவானதற்கு முன்னோடியாகும், முதலில்
பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், பால், தயிர்
மற்றும் நெய் ஆகியவற்றைக்கொண்டு பஞ்சகல்யா தயார்
செய்யப்பட்டது. பின்னர் அதனுடன் கரும்புச்சாறு அல்லது
வெல்லம், இளநீர், வாழைப்பழம் மற்றும் கள் போன்றவை
களும் சேர்க்கப்பட்டு நொதித்தல் தன்மையை அதிகப்படுத்திய
தால் தற்பொழுது பஞ்சகவ்யா ஒரு அங்கக சக்தியாகத்
திகழ்கின்றது.
பஞ்சகவ்யாவின் மூலப்பொருட்கள்.
பஞ்சகவ்யாவானது ஒரு சிறந்த இயற்கை உரமாக மட்டுமின்றி
பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர்த்திரவமாகவும், பூச்சி
மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்பாற்றலை ஊக்குவிக்கும்
காரணியாகவும் விளங்குகிறது. பசுவின் கோமையத்தில் அதிக
அளவில் சோடியம் குளோரைடு, கால்சியம் சல்பேட், மக்னீ
சியம் சல்பேட், பொட்டாசியம் ஹிப்யூரேட் போன்ற தாதுக்
களும் அடங்கி உள்ளன. பசுஞ்சாணத்தில் 82% நீரும், 18%
திடப்பொருளும் அடங்கியுள்ளது. பசும்பால், சாருண்ணி
பாக்டீரியாவிற்கு சிறந்த ஊடகமாக உள்ளதோடு நச்சுயிரிக்கு
எதிர் கொல்லியாகவும் விளங்குகின்றது. பாலிலுள்ள புரதம்
கொழுப்பு, கார்போஹைட்ரேட்,அமினோ அமிலம், கால்சியம்
ஹைட்ரஜன், லாக்டிக் அமிலம் மற்றும் லாக்டோபேசில்லஸ்
பேக்டீரியா போன்றவை பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
பசு நெய்யானது பயிர் வளர்ச்சியை மேம்படுத்த பண்டைய
காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இதில் வைட்டமின் ஏ பி
கால்சியம் மற்றும் கொழுப்புப் பொருள்கள் அடங்கியுள்ளன.
மேலும் வெட்டுக்காயங்களில் தொற்று நோயைத் தடுக்கும்
குளுகோசைடும் இதில் அடங்கியுள்ளது. பசுமாட்டுத்தயிரில்
அதிக அளவில் நொதித்தலுக்குக் காரணமான நுண்ணுயிர்களை
ஊக்குவிப்பதன் மூலமாக நோதித்தலுக்கு உதவுகின்றது.
தென்னை இளநீரானது கைனட்டினிற்கு விலை மலிவான
மாற்றாக செயல்படுவதுடன், நெல்லில் பச்சையத்தை
அதிகப்படுத்தும் தன்மையும் கொண்டுள்ளது.

தயாரிக்கும் முறை தொடரும்.

Sunday, November 1, 2009

பண்ணைச்சுற்றுலா



பண்ணைச்சுற்றுலா-பெரியகொடிவேரி.

கோவை மாவட்டத்தில் "வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் (IFGTB)" கடந்த மாதம் 8,9 தேதிகளில் இரண்டு
நாள் பயிற்சி கருத்தரங்கு நடத்தியது. அதில் இரண்டாவது
நாள் ஒரு பண்ணைச் சுற்றுலா ஈரோடு மாவட்டம் பெரிய
கொடிவேரியில் உள்ள ஸ்ரீ முருகவேல் வேளாண்மைப்
பண்ணைக்கு சுமார் 35 விவசாயிகள், விஞ்ஞானிகளுடன்
கொங்கு என்.கொளந்தசாமி அழைத்துச் சென்றார்.

செவாலியர், டாக்டர் கொங்கு என்.கொளந்தசாமி பல
வெகுமதிகள் பெற்றவர் 9443006666 மிக்க ஆர்வம்
உள்ளவர். அவரது உரவினர் குமாரசாமி மற்றும் பழனிசாமி
இருவரும் இவருக்குத் துணையாக உள்ளார்கள்.

பண்ணை ஆரம்ப வருடம் 1993, பண்ணையின் பரப்பளவு
230 ஏக்கர். தண்ணீர் பாசனம் ஏற்படுத்திய வருடம் 1998.
பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு 160 ஏக்கர். ஆரம்ப
கட்டத்தில் மஞ்ஞ்சள், மரவள்ளி, சோளம், வாழை, நெல்,
கரும்பு, ரோஸ்மேரி, பாம்ரோசா, சபேத்முசலி, கோசாப்
பழம், பாகல், புடல், பூசனி, புகையிலை மற்றும் எள்
ஆகியன பயிரிடப்பட்டன. திராச்சையும் நெல்லியும்
நீண்டகாலப்பயிர்களாக இருந்தன.

பெரிய கொடிவேரி அணைக்கு அருகில் ஒரு ஏக்கர் நிலத்தில்
பம்பிங் செய்ய கட்டிடங்கள் அமைத்து 30 எச்.பி. உள்ள
5 சர்வீசுகள் பெற்றுள்ளார். அங்கிருந்து பண்ணைக்கு 12 அஙுகுல
எ.சி.சி. பைப் மூலம் 2000 மீட்டர் ஒன்றும் 1250 மீட்டர் பைப்
ஒன்றும் நிலத்தடியில் பதித்து பண்ணையில் உள்ள பெரிய
நீச்சல் குளம் போன்ற தொட்டிக்குக் கொண்டுவந்து அதிலிருந்து
தோட்டதுதிற்குப் பகிர்ந்தளிக்கிறார். மேலும் பண்ணைக்குள்
30 எச்.பி. ஒரு சர்வீசும் 10 எச்.பி. 5 சர்வீசும் அமைத்துள்ளார்.
எந்தக்காலத்திலும் தண்ணீருக்குப் பஞ்சமேயில்லை.

பயிர்கள் முக்கோண நடவுமுறை.

10'X 10' மலைவேம்பு 13 ஏக்கர்6000 கன்றுகள். 22 மாதங்கள்
13'X 13' மூங்கில் வல்காரீஸ் 5 ஏக்கர் 1400 கன்று. 18 மாதம்
15'X 15' மூங்கில் வல்காரீஸ் 8 ஏக்கர் 1600 கன்று. 6 மாதம்
5.5'X 5.5'யூகோலிப்டஸ்,லாரா.10 ஏக்கர் 16000 கன்று. 27 மாதம்
12'X 12' நாட்டு வாகை, பூவரசு 5 ஏக்கர் 800 கன்று. 18 மாதம்
8' X 8' மகாகணி, காயா. 2000 கன்று 14 மாதம்
5' பார் கரும்பு நிலத்தடி சொட்டு நீர். 22 ஏக்கர்
5' பார் கரும்பு சாதாரண முறைப்பாசனம்.10 ஏக்கர்.
----------பாப்புலர் மரம் 30 கன்று 6 வருடம்.
----------தென்னை. 3000 கன்றுகள் 105 வருடம்.
----------தென்னை பதிமுகம் ஊடுபயிர்.800 கன்றுகள் 2 வருடம்.
---------- சைமரூபா (சொர்கமரம்) 30 கன்று 6 வருடம்.
---------- சந்தனம். 6 கன்று. 2 வருடம்.

=====================================================

பயிர்கள் நேர் நடவு முறை.

15'X 15' குமழ் மூங்கிலுக்கு இடையில்.8 ஏக்கர் 1500 கன்று 6 மாதம்
5'X 5' குமிழ் தனியாக-----------அரை ஏக்கர்400 கன்று 14 மாதம்.
5'X 5' பென்சில் தனியாக-------அரை ஏக்கர் 400 கன்று 14 மாதம்.
6'X 6' பதிமுகம் தனியாக-----17 ஏக்கர் 17000 கன்று. 4 வருடம்.
5'X 5' சவுக்கு ஜுங்குலியான-----10 ஏக்கர் 18000 கன்று 27 மாதம்.
12'X 12' ஈட்டி---------------------- 200 கன்று 18 மாதம்.
12'X 12' சிசு----------------------- 200 கன்று 18 மாதம்.
12'X 12' செஞ்சந்தனம்-------------- 200 கன்று 18 மாதம்.

=========================================================

பண்ணைமுழுதும் ஒறே பசுமையாக உள்ளது. வீட்டு உபயோகத்திற்கு
மட்டும் கிச்சிடிசம்பா நெல் பயிரிட்டுள்ளார். சர்கரை ஆலையிலிருந்து
உரம் டன் கணக்கில் வாங்கி மற்ற சாண உரங்களுடன் கலந்து நல்ல
கலப்புரமாக மாற்றி இடுகிறார். எல்லா மரங்களுக்கும் சொட்டு நீர்
பாசன முறைதான் பின்பற்றுகிறார். எல்லாமே வளமாக உள்ளன.
தென்னையில் பதிமுகம் மரம் நட்டதால் பதிமுக முட்கள் உள்ளே
செல்ல முடியாமல் தடையாக உள்ளன.


பார்க்கவேண்டிய மரப்பண்ணை. வாழ்க வழமுடன்.


------------------------(விவசாயம் தொடரும்)

Thursday, October 29, 2009

வேளாண் தேசிய மாநாடு

கோவையில் வேளாண் தேசிய மாநாடு.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்
வரும் நவம்பரில் 6,7,8 ஆகிய தேதிகளில் வேளாண்மை
அறிவியல் நிலையங்கிளின் தேசிய மாநாடு நடக்கவுள்ளது.

முதல் நாள் நிகழ்சியில் தமிழக முதல்வர் கலந்து
கொளிகிறார். மத்திய வேளாண் மற்றும் நுகர்வோர்
நலம், உணவு மற்றும் பொது வினையோக அமைச்சர்
திரு சரத்பவார் வேளாண் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த வேளாண் விஞ்ஞானிகள்
பங்கேற்கின்றனர். மாநாட்டில் வேளாண் அறிவியல் நிலைய
விஞ்ஞானிகளின் அனுபவங்கள்,வெற்றிக் கதைகள், சிறப்பு
தொழில் நுட்ப பறிமாற்றம் குறித்த கருத்துப் பறிமாற்றம்
நடைபெறும்.

வேளாண் பல்கலை துணைவேந்தர் திரு முருகேசபூபதி
மேலும் கூறியதாவது-

தேசிய அளவில் 569 வேளாண் அறிவியல் நிலையங்கள்
இயங்கி வருகின்றன. அதில் 30, தமிழகத்தில் உள்ளன
இதில் 14, கோவை வேளாண் பல்கலை கட்டுப்பாட்டில்
உள்ளது. தேசிய அளவிலான 569 வேளாண் அறிவியல்
நிலையங்களின் சார்பில் விஞ்ஞானிகள் இம்மாநாட்டில்
பங்கேற்கவுள்ளனர். மாநாட்டின் துவக்கவிழாவில், தலை
சிறந்த வேளாண் அறிவியல் நலையங்களுக்கான விருதுகள்
வழங்கப்படும். பல்கலை வளாகத்தில் 150 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உழவர் இல்லம் திறந்து
வைக்கப்படும்.



------------------------(விவசாயம் தொடரும்)

Wednesday, October 14, 2009

நவீன தொழில்நுட்பங்கள்

பனிவரகு கோ.5

சாகுபடி :- இந்த ரகத்தின் சிறப்பம்சங்கள்; மிகக்குறுகிய
வயது-70 நாட்கள். அதிக தூர்கள்- 4 - 10. அதிக கதிர்
நீளம் 135 செ.மீ. அதிக ஊட்டச்சத்து கொண்டது
அதிக மகசூல். திரட்சியான மஞ்சள் நிற தானியம்.
வறட்சியைத் தாங்கும் தன்மை. பூச்சி மற்றும் நோய்
களைத் தாங்கி வளரும் தன்மை.

பருவம் :-ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம்.

நிலம் தயாரித்தல் :- செம்மண் மற்றும் இரு மண் கலந்த
நிலங்கள் ஏற்றவை. கோடை மழையைப் பயன் படுத்தி
நிலத்தை சட்டி கலப்பை கொண்டு ஆழமாக உழவு
செய்ய வேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம்
தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன் களைகள்
கட்டுப்படுத்தப் படுகின்றன.

விதையளவு :- வரிசை விதைப்புக்கு-ஏக்கருக்கு 4 கிலோ.
தூவுவதற்கு-6 கிலோ. இடைவெளி; வரிசைக்கு வரிசை 25
செ.மீ. செடிக்குச்செடி 10 செ.மீ. கை விதைப்பு அல்லது
விதைப்பான் அல்லது கொரு கருவி கொண்டு வரிசை
விதைப்பு செய்யலாம். ஒரு ஏக்கருக்குத் தேவையான
விதையளவிற்கு ஒரு பொட்டலம் (200) கிராம் அசோ
பாசை அரிசிக்கஞ்சியுடன் கலந்து தூவ வேண்டும்.

உரமிடுதல் :- ஒரு ஏக்கர் நிலத்தில் அடியுரமாக 5 டன்
மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின் போது
பரப்பி பிறகு நிலத்தை உழவேண்டும்.பின்னர் 8 கிலோ
மணிசத்து ஆகியவற்றை விதைப்பின் போது அடியுரமாக
இட வேண்டும். மேலுரமாக 8 கிலோ தழைசத்தை
விதைத்த 20-25 நாட்கள்கழித்து கிடைக்கும் ஈரப்பத்த்தை
பயன்படுத்தி இடவேண்டும்.

பயிர் கலைத்தல் :- விதைத்த 12-15ம் நாளில் செடிகளை
கலைத்து தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க
வேண்டும்.

களைநிர்வாகம் :- விதைத்த 18-20ம் நாள் ஒரு களை
எடுத்தல் அவசியம்.

பயிர்பாதுகாப்பு :- இந்த ரகத்தைப் பொதுவாக பூச்சிகள்
மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. எனவே பயிர்
பாதுகாப்பு செய்ய வேண்தியதில்லை.

அறுவடை :- நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை
செயுது களத்தில் காயவைத்து பின் விதைகளைப் பிரித்
தெடுக்க வேண்டும்.

தானிய மகசூல் :- மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு 953 கிலோ.

தட்டை மகசூல் :- மானாவாரியில் ஒரு ஏக்கருக்கு 2670 கிலோ.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,
மற்றும் திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில்
மானாவாரியில் சாகுபடி செய்ய ஏற்றது.

(தகவல்-அ.நிர்மல்குமார், ப.தேவன் மற்றும் ரா.சத்யா,
சிறுதானியத்துறை, தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்
கழகம், கோயம்புத்தூர்-641 003. போன் 0422-24505507.)

---------------------------------(தொடரும்)

Tuesday, October 13, 2009

உயர்தர மரக்கன்று உற்பத்தி

-------------------------------(பயிற்சிமுடித்து நிழற்படம்)
உயர்தர மரக்கன்று உற்பத்தி.’

கோயம்புத்தூர், இரத்தினசபாபதிபுரம்,
கௌலிபிரௌன் சாலை அருகே
வனவளாகத்தில் ‘வனமரபியல் மற்றும்
மரப்பெருக்கு நிருவனம்’ (I.F.G.T.B.)
சுமார் 30 விவசாயிகளுக்கு மேல்
உயர்தர மரக்கன்று உற்பத்தி செய்வது
பற்றித் தொழில் நுட்பங்கள் மற்றும் பல
தகவல்கள் சென்ற 8-10-2009 மற்றும்
9-10-2009 தேதிகளில் விஞ்ஞானி
கள் வகுப்பறை விளக்கமும்,
கலந்துறையாடலும் செயல்முறை விளக்கமும்,


மரப்பண்ணை சுற்றுலாவும் சிறப்பாக அளித்
தார்கள். இந்த பயிற்சியின் இன்றி
யமையாயது குழுப்புகைப்படத்துடன் சான்றிதழும்
அளித்தது விவசாயிகளின் வாழ்வில் மறக்க
முடியாத ஒன்று. மேலும் இந்த நிறுவனத்தின்
இயக்குனர் திரு. என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ்.
அவர்கள் இந்தப் பயிற்சிக்கு மிகவும்
உருதுணையாக இருந்து பல அறிவுறைகள்
அளித்தார்கள். இந்த நிறுவனம் காரமடை
அருகே ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துள்ளது.
அதில் பல அறிய செயல்களையும் ஆராய்ச்
சிகளையும் செய்து விவசாயிகள் பலரையும்
தன்வயம் (I.F.G.T.B.பக்கம்) இழுக்கும்
என்பதில் ஐய்யமில்லை.
திரு. என்.கிருஷ்ணகுமார் ஐ.எப்.எஸ். அவர்
கள் இந்த 2 நாட்கள் பயிற்சிக்கு தலைமை
யேற்றுத் தொடங்கிவைத்து ஆற்றிய உரையில்
சில துளிகள்.

நமது நாட்டின் பரப்பளவில் 23 சதவீதமே
வனங்களைத் தாங்கியுள்ளது. அவ்வனங்க
ளும் கால்நடை மேய்ப்பு, மரம்
வெட்டுதல், வேட்டையாடுதல், காட்டுத்தீ
போன்ற பல்வெறு விதமான இன்னல்
களுக்கிடையே வளர்ந்து வருகின்றன.
இத்தகைய காரணங்களால் நமது காடு
களின் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு
ஒரு எக்டேரில் 2.1 கனமீட்டருடன் ஒப்பிடும்
பொழுது இது மிகவும் குறைந்த தாகும்.
இத்தகைய காடுகளிலிருந்து நமது தேவை
களைப் பூர்த்தி செய்வதாயிருந்தால்
அவை மேலும் நலிவடைய நேரும்.

இயற்கையான காடுகளில் இருந்து நமது
தேவைகளைக் குறைக்க ஒரு வழி வன
மரத்தோட்டங்கள் ஏற்படுத்துவதே யாகும்.
இத்தகைய தோட்டங்களை விவசாயம்
செய்ய இயலாது தரிசு நிலங்களில் உருவாக்க
இயலும். நீர் பற்றாக் குறை, ஆள் பற்றாக்குறை,
குறைந்து வரும் உற்பத்தித் திறன் மற்றும்
வருமானம் போன்று பல இன்னல்களை
விவசாயம் சந்தித்துவரும் வேளையில்
விவசாய நிலங்களிடையே மரவளர்ப்பு பெரும்
பெருமளவில் உதவக்கூடும். இவ்வாறு வனத்
தோட்டங்கள் மற்றும் விவசாய நிங்களிலே
மரவளர்ப்பு போன்ற திட்டங்கள் செயல்
பட முக்கியத் தேவை தரமான நாற்றுக்களே.
மரபுத்திறன், செயல் திறன் மற்றும் தோற்றம்
இவற்றில் சிறந்து விளங்கும் மரக்கன்றுகளை
வளர்ப்பதன் மூலம் நமது மரவளர்ப்பில்
உற்பத்தித் திறனை ஆண்டு ஒன்றுக்கு
ஒரு எக்டேரில் இருபதிலிருந்து மூப்பது கன
மீட்டர் வரை உயர்த்த இயலும். இத்தகைய
தோட்டங்கள் பெருகினாலே நமது நாட்டின்
மரம் மற்றும் மரம் சார்ந்த பொருட்களின்
தேவையைப் பூர்த்தி செய்ய இயலும். மேலும்
இதனால் மரம் சார்ந்த தொழிற்சாலைகளும்
நன்கு இயங்க இயலும். இத்தகைய
தோட்டங்கள் கிராமப்புரங்களில் அமைவ
தால் ஊரக வளர்ச்சிக்கும் உதவும். மேலும்
நமது நாட்டின் பரப்பளவில் 33 சதவீதம் காடு
கள் அமைய வேண்டும் என்ற கொள்கையை
அடையவும் வழிகோலும்.

இவ்வாறு வனத்தோட்டங்களின் மற்றும்
விவசாய நிலங்களிலுள்ள மரப்பயிர்
சாகுபடியின் உற்பத்தித்திறனை பெருக்கும்
நோக்கதுதுடன் வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு
நிறுவனம் கோவையில் செயல்பட்டு வருகிறது.
இங்கு 70 தலைப்பில் ஆராய்ச்சிகள் நடைபெற்று
வருகின்றன. ஆராய்ச்சியன் முடிவுகள்
சிறந்தவை கிராம மக்களுக்குச் சென்றடாய
வேண்டும் என்று கூறினார்.
--------------------------------(தொடரும்.)

Friday, August 7, 2009

கோலியஸ்.


முன்னுறை -: கோலியஸ் என்பது ஒரு மருந்துப் பயிர். இதை மருந்துக்கூர்கன் என்று தமிழில் சொல்வர். கோலியஸ் ஓமவள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்த மூலிகைச் செடி. இது நெருக்கமான இலைகளில் தடிமனான இலைகளுடன் சுமார் 2 அடி உயரம் வரை வளரக்கூடியது. இச்செடியானது நுனிக்கொழுந்தைக் கிள்ளி நட்டு வளர்க்கப்படுவதால் ஆணிவேர் உண்டாவதில்லை. அடிக்கணுவிலிருந்து பக்க வேர்களே உண்டாகின்றன. பழுப்பு நிற வேர்களிலிருந்து ஒல்லியான கேரட் வடிவத்தில் 1 அடி நீளம் வரை கிழங்குகள் உருவாகின்றன. ஒரு செடியிலிருந்து அரைக் கிலோ முதல் ஒரு கிலோ வரை பச்சைக் கிழங்குகள் கிடைக்கின்றன. இதன் மருத்துவ குணம் -இரத்த அழுத்தத்தை சீர் செய்து இதயப் பழுவைக் குறைக்கின்றன. இது ஆஸ்த்மா, புற்று நோய், கிளாக்கோமா நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளில் முக்கிய மூலப்பொருளாகச் செயல்படுகிறது. தற்போது ஒரு கிலோ பச்சைக் கிழங்கின் விலை ரூ.10-00 க்கு மேல் விற்கப்படுகிறது. இதன் சாகுமடி குறித்துக் கீழே காண்போம்.

மண்வளம் -: கோலியஸ் கிழங்குச் செடிவளர பொலபொலப் பான மண் அவசியம். பொலபொலப்பான செம்மண், வண்டல்மண், வண்டல் சேர்ந்த குறுமண், சத்து நிறைந்த சரளமண் ஏற்றவை. தண்ணீர் தேங்கும் கரிசல் பூமி, களி நிலங்கள் வேண்டாம். களர் மண்ணும் கூடாது. கோலியஸ் வேர்கள் மெல்லியானவை தண்ணீர் தேங்கினால் தாங்காது. ஆகவே வடிகால் வசதியுள்ள நிலமாக வேண்டும். நீர் வடியாத இடத்திலோ நீரைப்பிடித்துக் கொள்ளும் சொதசொதப்பான மண்ணிலோ நட்டால் இளம் வேர்கள் மூச்சிவிட முடியாமல் அழுகிப்போகும். செடி வாடிப்போகும்.

கோலியஸ் கடல் மட்டத்திற்கு 3000 அடி வரை உள்ள இடங்களில் வளர்கிறது. சூரிய வெளிச்சம் நன்கு படக்கூடிய காற்றுள்ள மலைச் சரிவுகளிலும் நடலாம். மான வாரியாகப் பயிரிட்டால் பயிர்காலமான ஆறு மாத்ததிற்குள் சுமார் 100-120 செ.மீ. மழை தேவை. அதனைப் பிடித்துவைத் திருக்கக் கூடிய மண்ணும் தேவை. நிழல்கள் உள்ள இடத்தில் இதை நடக்கூடாது.

மண்ணின் கார அமில நிலை பிச் 8.00 - 7.00 க்குள் உள்ள இடங்களிங் இதன் மகசூல் திறன் அதிகமாகக்

காணப்படுகிறது. அதாவது கிழங்குகள் நன்கு பருக்கின்றன. கிழங்ககளின் எடையும் அதிகமாக இருக்கிறது. கத்திரி, தக்காளி, வெண்டை போன்ற காய்கறிப் பயிர்களிலும் வாழையிலும் நூற்புழுக்களின் தாக்குதல் அதிகம். ஆகவே அப்பயிர்களிக்குப் பின்பு உடநடியாக கோலியஸ் பயிரிட வேண்டாம். நிலத்தை உழுது நன்கு காயவிட்டு, நிறைய எரு அடித்து கலந்து விட்டு, நூற்புழுத் தடுக்கும் பயிர்களைப் பயிரிட்டு, அதற்கடுத்து கோலியஸ் பயிரிடுவதே பாதுகாப்பானது. சோளத்திற்குப் பின்பு கோலியஸ் பயிரிட்டாலும் மஞ்சள் பயிரிட்டாலும், கிழங்கு மகசூல் அதிகரிக்கிறது என்பது உண்மை.

நிலத்தை உழுது எரு இட்டுப் பண்படுத்தல் :- நிலத்தை புழுதிபட உழவு செய்யவும். நடவுக்கு ஒரு மாத காலத்திற்கு மூன்பாகவே ஏக்கருக்கு 7 டன் தொழு எருவைச் சிதறி விட்டு உழவு செய்யவும். ஈரமான மண்ணில் நுண்ணுயிர்கள் எருவைச் சாப்பிட்டுப் பெருகும். அந்நிலத்தில் பயிர்கள் நட்டவுடன் துளிர்க்கும். துரிதமாய் வளரும். களை விதைகள் முழைத்திருந்தால் அதனையும் உழுது காய விட்டு பார் போட்டால் அப்புறம் அதிக களை முளைக்காது. அக்களைச் செடிகளும் மண்ணோடு மக்கி நுண்ணூட்டங்களை பயிருக்குக் கொடுக்கும்.

பாத்திகள் அமைத்தல் -: கோலியஸ் மண்ணுக்குக் கீழ்தான் கிழங்குகள் உண்டாகின்றன. மண் இருகாமல் இருக்க 15 அடிக்கு 30 அடி நீளவாக்கில் 2 அடி இடைவெளியில் கலப்பையிலோ, டிராக்டரினாலோ மண்வெட்டியாலே பார்கள் அமைக்க வேண்டும்.

நடவு இடைவெளி -: வளமான எருவிடாத நிலங்களுக்கு பாருக்குப்பார் 2 அடி X செடிக்குச்செடி 1.5 அடி. அவ்வாறு ஏக்கருக்கு 14500 கன்றுகள் தேவைப்படும்.

வளம் குறைந்த எருவிட்ட நிலங்களிக்கு பார் 2 அடி X செடிக்கு செடி 1.25 அவ்வாறு ஒரு ஏக்கருக்கு 17000 கன்றுகள் தேவைப்படும்.

வளம் குறைந்த சரளை மண்ணுக்கு பாருக்குப் பார் 1.75 X செடிக்குச்செடி 1.25 அடி ஆக ஒரு ஏக்கருக்கு 20,000 கன்றுகள் தேவைப்படும்.

நடவுக்கு ஏற்ற கொழுந்து -: முற்றிய பின் கொழுந்து இளம் பச்சை நிறத்திலிருந்து கரும் பச்சை நிறத்திற்கு மாறி தண்டு பகுதி கெட்டியாயிருக்கும். அதன் நுனிக் கொழுந்தை சுமார் 10 செ.மீ.நீளம் விட்டு 3 - 4 கணுக்கள் இருக்கும். அந்தக் கணுவில் ஜோடி இலைகள் இருக்கும். அதை வெட்டி எடுக்கும் போது புது பிளேடால் வெட்டி சேகரிக்க வேண்டும்.

நீர் பாச்சல் -: பாத்திப் பார்களில் தண்ணீர் விட்டு கொழுந்துகளை தகுந்த இடைவெளியில் நட வேண்டும். பின் 3 ம் நாள் உயிர் தண்ணீர் பாச்ச வேண்டும். 40 நாட்களி வரை வாரம் ஒரு தடவை பாசனம், 40 நாட்களிக்குப்பின் 10 நாட்களுக்கு ஒரு தடவை, அறுவடைக்கு 10 நாள இருக்கும் போதே பாசனத்தை நிறுத்த வேண்டும். செடி வாடும் போது நீர் பாச்ச வேண்டும்.

களையெடுத்தல் -: கோலியஸ் நடவு நட்ட 15 - 20 நாடகளில் முதல் களையை வேர்களுக்குப் படாமல் சுரண்டி எடுக்கவேண்டும். தாமதித்தால் கிளை வேர்கள் படர்ந்து வெட்டுப் பட நேரிடும். இரண்டாவது களை கைக்களை சிறந்தது. கதிர் அரிவாளால் தரைமட்டத்தில் அறுத்து எடுப்பது நன்று. 40 நாட்களுக்குள் இரண்டாம் களை எடுத்து மண் அணைத்து விட வேண்டும். தாமதித்தால் வேர்கள் படர்ந்து விடும். 50 நாட்களுக்கு மேலாகி விட்டால் களை எடுக்கக் கூடாது. 60 நாடகளுக்கு மேல் அனாவசியமாக பாத்திக்குள் நடக்கக் கூடாது.

உரம் இடல் -: நட்ட 50 நாளிலும், 100 வது நாளிலும், 150 வது நாளிலும் பார் மேட்டில் இரண்டு வரிசைக்கு நடுவே உரம் இட வேண்டும். உரங்களை நீரில் கரைத்து விடும் முறை. 200 லிட்டர் டிரமில் வேப்பம் புண்ணாக்கு 10 கிலோ, கடலைப் புண்ணாக்கு 10 கிலோ மற்றும் டெஎபி 10 கிலோ, 3-4 நாட்கள் ஊரவைத்து பாசன நீறுடன் கலந்து பாச்ச வேண்டும். நுண்ணுயிர் உரம் 50 நாட்களிக்குள் இட வேண்டும்.

நோய்தாக்குதல் -: வேர்முடிச்சு நூற்புழு வேர்களில் உள்ள செல்களைத் தாக்குவதால் வேர் அழுகல் நோய் காரணிகள் புகுந்து தாக்கு கின்றன. பார்களில் செண்டு மல்லி, கொத்து மல்லி பயிரிட்டால் அதன் வேரோடு உரசிச் செல்லும் நீர் பாய்ந்தாலே நூற்புழு கட்டுப் படுத்தலாம். வேர் அழுகல் நோயிக்கு ஏக்கருக்கு 2 கிலோ டிரைக்கோ டெர்மாவிர்டியுடன் 200 கிலோ மண்புழு உரத்தையும் கலந்து தூருக்குத்தூர் வைத்து மண் அணைத்து 25-50 நாட்களில் 2 தடவையிட்டு நீர் பாச்சினால் கட்டுப்படும்.

அறுவடை -: கோலியஸ் கொழுந்து நட்டு 6 மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பே நீர்பாச்சல் நிறுத்த வேண்டும். தரைக்கு மேல் உள்ள தண்டு பகுதிகளை அறுத்து பாத்திக்கு வெளியே பொண்டு வந்து விட வேண்டும். ஆட்களை வைத்து மண் வெட்டியால் வெட்டி பொறுக்கு சேகரிக்க வேண்டும். மகசூல் ஒரு ஏக்கருக்கு 7-10 டன் கிடைக்க வாய்ப் புள்ளது. தற்போது பச்சைக் கிழங்கின் விலை ரூபாய் 10-00 க்குப் போய்கிறது. இது பயிரிட மான்யமும் உண்டு ஒப்பந்த சாகுபடியும் உண்டு.

ஒப்பந்த சாகுபடி முறையில் கோலியஸ் மூலிகைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த நிறுவனம்-

எம்.ஜி.பி.மார்கெட்டிங் சென்டர்ஸ்,

469, மகாலச்சுமி காம்ளெக்ஸ்,

அண்ணாபுரம்,

5 ரோடு, சேலம்-4.

போன்-0427-2447143.

செல்-9842717201 அலுவலகம்.

ஜி.பழனிவேல் பி.எஸ்.சி.,

செல்- 98427 44232.

மேலே உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டுகிறேன்.

--------------------------------------------------(தொடரும்)

Monday, July 13, 2009

ஆடு நிற்குமா?


இலவசம் என்றால் முந்துவீர்களா?

விவசாய நண்பர்களே ஆடு வளர்பது பற்றிய இலவசப் பயிற்சி இன்று ‘இந்து’ நாள் இதழில் சரவணம்பட்டியில் நாளையும் அதற்கு மறு நாளும் நடப்பதாக அறிவித்து அதற்கு முன் பதிவு செய்யும் படி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அந்த எண்ணை இன்று 13-7-2009 தொடர்வு கொண்ட போது முன் பதிவுகள் முடிந்து விட்டதாகவும் 70 பேர் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்வார்கள் என்ற தகவலை கால்நடை பல்கலைக் கழகத்தார் தெறிவித்தனர். அதனால் எதிலும் முந்துங்கள். அடுத்த பயிற்சிக்காக.

இதே போன்று அடுத்த ஆடு வளர்க்கும் பயிற்சி அக்டோபர் மாதம் 13 மற்றும் 14 தேதிகளில் நடக்கவிருப்பதாகச் சொன்னார்கள். அதனால் விடுபட்டவர்கள் அந்தத் தேதிக்காக தற்பொழுதே பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன். அதே தொலை பேசி எண்தான். 0422-2669965., கோவை.
‘முயற்சி திருவினையாக்கும்.’
நன்றி.
-------------------------------------------(தொடரும்)

Sunday, July 12, 2009

ஆடு வளர்க்கலாமே!


Free training in goat farming.
The Veterinary University Training and Research Centre here will offer a free intensive training programme in goat farming on July 14 and 15.

According to a release, the programme will benefit farmers and entrepreneurs involved in livestock farming and also those of poor and landless labourers.

The training is expected to make existing marketing of live goats and goat meat is profitable for producers. Those interested can contact the centre at Kalappati Pirivu, Saravampatti P.O. or call 0422-2669965, for details and registration.
(Thank to THE HINDU )
அன்பார்ந்த விவசாயப் பெருமக்களே.
ஆடு வளர்ப்புப் பற்றி சரவணம்பட்டியில் வரும் 14,15-7-2009 தேதிகளில் கால்நடை பல்கலைக்கழகம் சார்பில் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது அது சம்பந்தமாக விளக்கம் தெரியவும் முன் பதிவுக்கும், தொலை பேசி எண்-0422-2669965 தொடர்பு கொள்ளவும். நன்றி.
--------------------------------------------------(தொடரும்)

Thursday, July 9, 2009

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரிவு.


இன்று 6-7-2009 காலை கோவை கோடீசியா ‘டி’ ஹாலில் மத்திய மாநில அரசால் குறு, சிறு மற்றும் தடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானிய தொகை பற்றிய விளிப்புணர்வு பற்றிய கருத்தரங்கு தொடங்கிற்று. அதற்கு திரு.டி.காந்திகுமார் தலைவர் TANSTIA சென்னை அவர்கள் தலைமை தாங்கினார். திரு.பன்னீர்செல்வம், திரு.பழனிவேல், திரு அசோகன், திரு.ராமமூர்த்தி, திரு.சதுர்வேதி, திரு.சௌடையன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். மானியம் பெருவதில் உள்ள சிரமங்கள், வங்கிகளின் அலட்சியம் பற்றியும் கூறினார்கள். திரு.கண்ணன் அவர்கள் நன்றி கூறினார்.
அதைப்பற்றிய சிறு குறிப்பு மட்டும்.
இந்திய அரசு சமீபத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம்-2006 ஐ இயற்றியதன் மூலம் ‘சிறு தொழில் பிரிவு’ என்பது ‘குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பிரிவு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நிறுவனப்பிரிவுக்கு மூக்கியத்துவம் அளிக்கப்பட்டதோடு நடுத்தர தொழில் நிறுவனங்களும் இப்பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது.
முதலீட்டு மதிப்பின் அடிப்படையில்
குறு உற்பத்தி நிறுவனங்கள் ரூ.25 லட்சம் வரை.
சிறு உற்பத்தி நிறுவனங்கள் ரூ.25 லத்சத்திற்கு மேல் 5 கோடி வரை
நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் ரூ.5 கோடிக்கு மேல் 10 கோடி வரை.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கையின் தேவை.

உலகமயமாக்கல் மற்றும் அதைத் தொடர்ந்த பொருளாதார சீர்திருத்தம் ஆகியவற்றின் விளைவாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் வய்ப்புகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. வர்த்தகத் தடைகள் குறைப்பு, தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் மற்றும் தகவல் பறிமாற்ற வசதி ஆகிய காரணங்களால் தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களியும், சேவைகளியும் உலகில் எப்பகுதியில் இருந்தும் மலிவான விலையில் திறன்மிகு ஆதாரங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.உலக மயமாக்கல் மற்றும், அதைத் தொடர்ந்து சந்தையில் நிலவும் போட்டி அதகரித்திருப்பதை கருத்திற் கொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான கொள்கைகள் வகுக்கப்படல் வேண்டும். மாறிவரும் சூழ்நிலைக் கேட்ப குறு, சறி மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தம்மை தயார் படுத்திக்கொள்ளல் அவசியமாகிறது.

தலைப்புகள்.-----------------------------------------------------
கொள்கை சார் நடவடிக்கைகள்.--------------------------
அடிப்படை கட்டமைப்பு வசதி அளித்தல்.------------
ஏற்கனவே இயங்கி வரும் தொழிற்பேட்டைகளை மேம்படுத்துதல்.------------------------------------------
புதிய தொழில் பேட்டைகள் நிறுவுதல்.------------------
அடுக்குமாடி தொழிற்பேட்டைகளை அமைத்தல்.-----
பத்திரப் பதவு கட்டண சலுகை.----------------------------
தனியார் துறையில் மேம்படுத்தப் படும் தொழற் பேட்டைகள்.
மூலப்பொருள் வினையோகம்.--------------------------------
நேரடி ஊக்குவிப்பு மானிய உதவிகள்.---------------------
மூலதன மானியம்.------------------------------------------------
குறைந்த மின் அழுத்த மின் மானியம்.--------------------
மதிப்புக் கூட்டு வரிக்கு ஈடான மானியம்.----------------
முத்திரை கட்டண விலக்கு.--------------------------------------
பின்தங்கிய பகிதிகளில் அமைக்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி நிறுவனங்களுக்கான உதவிகள்.
மூலதன மானியம்.------------------------------------------------------
வேலைவாய்ப்பு பெருக்க மானியம்.--------------------------------
குறிப்பிட்ட வகை தொழில் முனைவோருக்கான கூடுதல் மூலதன மானியம். --------------------------
மாசற்ற மற்றும் சுற்றுச் சூழலுக்கு இயைந்த தொழில் நுட்பத்திற்கான கூடுதல் மூலதன மானியம்.
குறைந்த அழுத்த மின் மானியம்.---------------------------------
வேளாண் சார் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்க மானிய உதவிகள்.---------------------------------------
சிறப்பு வகை உற்பத்திநிறுவனங்களுக்கான மூலதன மானியம்.----------------------------------------------
மூலதனமானியம் பெற தகுதியில்லாத நிறுவனங்கள்-தொழில்கள்.------------------------------------------
ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி கொள்கை.
தொழில் நுட்ப ஆதரவு.----------------------------------------
தொழில் நுட்ப மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நவீனப்படுத்தலுக்கான உதவி.-----------------------
சிறு கருவி மையங்கள்--------------------------------------------
உற்பத்தி நிறுவனங்களின் போட்டியிடும் திறமையை அதிகறித்தல்.-----------------------------------------
தொழில் குழும மேம்பாட்டுத் திட்டம்.---------------------
பின்முனை வட்டி மானியம்.-----------------------------------
தொழில் நுட்ப வளர்ச்சி நிதி.------------------------------------
தொழில் நுட்ப வணிக சேவை வசதி வளர்பகங்கள்.
அறிவுசார் சொத்துரிமைக்கான மானிய உதவி.---------------
குறிப்பிட்ட வகை தொழில்களுக்கான தொழில் நுட்ப மேம்பாட்டுத் திட்டம்.------------------------------
சான்றளித்தல் மற்றும் பரிசோதனை.---------------------------
செயல்திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி.---------------------
தகவல் மற்றும்சந்தை ஆதரவு.----------------------------------
சந்தைப்படுத்துதலுக்கான ஆதரவு, கருத்தரங்குகள் மற்றும் பொருட்காட்சிகள்.---------------------------
கட்டுப்பாடுகள் நீக்கம் மற்றும் எழிதாக்குதல்.
பொன்றவை.-----------------------------------------------------------
-------------------------------------------(தொடரும்)

Wednesday, July 1, 2009

மரம் வளர்க்க..........?


நட்சத்திரங்களும் அதற்குண்டான மரங்களும்.

நட்சத்திரம்.----------------------------மரம்.
1. அஸ்வினி ---------------------எட்டி மரம்.
2. பரணி -------------------------நெல்லி மரம்.
3. கார்த்திகை --------------------அத்தி மரம்.
4. ரோகினி ------------------------நாவல் மரம்.
5. மிருக சீரிடம் -----------------கருங்காலி மரம்.
6. திருவாதிரை -------------------செங்குரு (செம்மரம்).
7. புனர்பூசம் -------------------------மூங்கில் மரம்.
8. பூசம் --------------------------------அரச மரம்.
9. ஆயில்யம் -----------------------புன்னை மரம்.
10. மகம் -------------------------------ஆல மரம்.
11. பூரம் ---------------------------------பலா மரம்.
12. உத்திரம் ----------------------------அலரி மரம்.
13. அஸ்தம் -----------------------------வேலம் மரம்
14. சித்திரை ------------------------------வில்வ மரம்.
15. சுவாதி ---------------------------------மருது மரம்.
16. விசாகம் -------------------------------விலா மரம்.
17. அனுஷம் ------------------------------மகிழம் மரம்.
18. கேட்டை -------------------------------பிராய்(குட்டி பலா)
19. மூலம் -----------------------------------மா மரம்.
20. பூராடம் -----------------------------------வஞ்சிமரம்.
21. உத்திராடம் --------------------------------சக்கைப் பலா மரம்.
22. திருவோணம் -----------------------------வெள்ளெருக்கு மரம்.
23. அவிட்டம் -----------------------------------வன்னி மரம்.
24. சதயம் -----------------------------------------கடம்ப மரம்.
25. பூரட்டாதி -------------------------------------தேமா (கரு மருது)
26. உத்திரட்டாதி ----------------------------------வேப்ப மரம்.
27. ரேவதி -------------------------------------------இலுப்பை மரம்.
==============================================
இவை யாவும் செல்வ செழிப்போடு வாழ வழர்க்கப்பட வேண்டிய மரங்கள்.
(நன்றி திரு.ஆர்.குப்புசேது)
-----------------------------------------------(தொடரும்)

Wednesday, June 17, 2009

கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம்.


ஒவ்வொரு மாதமும் 6 ந்தேதி துணை வன பாதுகாவலர் அலுவலகம், மரபியல் கோட்டம், பாரதிபார்க் ரோடு, கோவை 641043 வழாகத்திலும், 16 ந்தேதி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை 641003 தொழில்நுட்ப பூங்கா எண்-4 ன் வழாகத்திலும் தொடர்ந்து கருத்தரங்குகளை வனத்துறை மற்றும் விரிவாக்க கல்வி இயக்கம், த.நா.வே.ப. இவர்களுடன் இணைந்து நடத்தி வருகின்றது.

இந்த மாதம் 6 ந்தேதி நடைபெற்ற கூட்டத்திற்கு திருவண்ணாமலையிலிருந்து திரு எஸ்.கே. சண்முகசுந்தரம், ஐ.எப்.எஸ்., துணைவனப்பாதுகாவலர் அவர்கள் சந்தன மர சாகுபடி பற்றியும் அதன் சட்ட திட்டங்களைப் பற்றி விபரமாக விளக்கம் அளித்தார். சந்தன மரம் வெட்டும் போது 20 சதம் அரசுக்கும், 80 சதம் மர சொந்தக்காரருக்கும் அளிக்கப்படும். ஆனால் வரும் காலத்தில் சட்டங்கள் மேலும் தளரலாம். ஆஸ்திரேலியாவில் ஒரு சந்தன மரத்திற்கு நான்கு பக்கத்திலும் அகத்தி மரம் வளர்க்கிறார்கள். 13 ஆண்டுகளில் முதிர்வடையும் மரங்களை வளர்க்கிறார்கள். இது போன்று மேலும் பல தகவல்களைச் சொன்னார்.

அடுத்து திரு.ஏ.ஜொசப் ரெக்ஸின், பி.எஸ்சி., இயக்குனர் TIST Tree Planting India (P) Ltd., அவர்கள் கார்பன் வணிகம் பற்றி விளக்கமாகச் சொன்னார். பின் திரு. மு.அ.அப்பன், நிறுவனர் இயற்கை வாழ்வு மையம், குலசேகரப்பட்டினம், தூத்துக் குடி அவர்கள் ஆரோக்கிய வாழ்விற்கு ஏற்ற இயற்கை உணவு பற்றி சிறப்பான விளக்கம் அளித்தார். அவரே உதாரணமாக சமைக்காத உணவு மட்டும் சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். பின் சித்த மருத்துவர் திரு.திருமலைசாமி அவர்கள் ஓரிதழ் தாமரை பற்றி விளக்கம் அளித்து அதன் மருத்துவ குணங்களை எடுத்துறைத்தார். மதிய உணவு சமைக்காத உணவு வகைகள்.
அவுல், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், பேரிட்சை, தேங்காய், வெள்ளரி, கேரட் இயற்கை சூப் முதலியன மட்டும் கொடுக்கப் பட்டது.

பிற்பகல் வைத்தியர் நாதாநந்த சுவாமிகள் மூலிகைகள் எவ்வாறு வைத்தியத்தில் பயன் படுகின்றன என்று விளக்கங்கள் அளித்தார். பின் சித்த மருந்து தயாரிக்கும் தென் மாவட்ட அம்மையாரும் விளக்கத்துடன் மருந்துகளை விற்பனை செய்தார். அத்துடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.

மூலிகை கருத்தரங்கு.
சென்ற 16-06-2009 அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விரிவாக்க கல்வி இயக்கம் உதவியுடன் இச்சங்கம் மூலிகை கருத்தரங்கு தொழில் நுட்ப பூங்கா எண்-4 ல் காலை பத்து மணிக்கு மேல் தொடங்கிற்று. இச்சங்க தலைவர் தேவராஜன் கூட்டத்திற்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இலவசமா ஏற்பாடு செய்திருந்த பண்ணைச் சுற்றுலா பாண்டிச்சேரி ஏரோவில் சென்று வந்தது (13,14, 15-6-2009) பற்றி அனுபவங்களைச் சொன்னார். அளவாக 20 பேர் மட்டுமே சென்று வந்தனர். பின் திரு.கணேசன், திருநெல்வேலி, மூலிகை ஏற்றுமதியாளர் அவர்கள் திருநெல்வேலி சென்னா, நித்தியகல்யணி, துளசி, சர்கரைத் துளசி, கண்வெளிக்கழங்கு, அஸ்வகந்தா, ஆர்கானிக் மஞ்சள் போன்றவைப் பற்றிக் கூறி அவை ஆர்கானிக்கில் விளைந்ததற்கான சான்றும் தேவை என்றார். ஒப்பந்த முறையில் சாகுபடிக்கு ஏற்றுக் கொள்வதாக க்கூறினார். பின் அதற்கு முனைவர் கே.இராஜாமணி பிஎச்டி, துறைத்தலைவர் வாசனை பயிர் மற்றும் மலைத்தோட்டத் துறை, TNAU., அவர்கள் அந்த மூலிகைகள் குறித்து விளக்கம் அளித்து, அதை விளைவிப்பது பற்றிக் கூறி, ஆர்கானிக் சான்று பெருவது பற்றிக் கூறினார். கே.ஸ்ரீதர்புதூர் அமுதம் இயற்கை உணவகம் அமைத்திருப்பது பற்றிக் கூறி அவர் இயற்கை சூப் அளித்தார். திருமதி கண்ணம்மாள் ஜெகதீசன் அவர்கள் அஸ்வகந்தா சூப் மற்றும் டீ கொடுத்தார். மதிய உணவுக்குப்பின் சுற்றுலா சென்றவர்கள் பயனடைந்ததைப் பற்றிக் கூறினார்கள். டாக்டர் சித்திரா அவர்கள் பல்கலைகழகத்தில் மூலிகைக் குடி நீர் தயார் செய்து வெற்றியடைந்தது பற்றிக் கூறினார். பதிமுகம் துண்டுப்பவுடர் .5 கிராம் திப்பிலி காய், வேர் பவுடர் .5 கிராம் ஒரு லிட்டர் குடி நீரில் அரை மணி நேரம் வைத்திருந்தால் நல்ல குடிநீர் தயார் என்று கூறினார் விலை மிகவும் குறைவு. பின் நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது. இது 4 வது கருத்தாய்வுக் கூட்டம்.
-----------------------------------------------(தொடரும்)

Thursday, May 14, 2009

ஒரு இரங்கல் செய்தி.





எனது மனைவி சாரதாமணி 10-5-2009 அன்று மாலை 3-40 மணியளவில் இயற்கை எய்து விட்டாள் என்று வருத்தத்துடன் தெறிவித்துக் கொள்கிறேன். நன்றி.
உங்கள் அன்பன்
குப்புசமி.க.பொ.
கோவை-641037.
9487283644.

Thursday, April 23, 2009

தேசிய மருந்துப்பயிர்கள் வாரியம்.


கோவை மாவட்டத்தில் வன விரிவாக்க மையம் பல வருடங்களாக டி.சி.எப். அலுவகத்தில் பல விவசாயிகளுக்கு மூலிகை வளர்பது, விற்பனை செய்வது, வளர்ப்பு முறைகள் இடர்பாடுகள், சந்தைப்படுத்துதலில் சிக்கல்கள் பற்றி மாதா மாதம் விளக்கி வந்தது பின் ஜூன் 2006 ல் தான்
‘கோவைமாவட்ட மரம் மற்றும் மூலிகைவளர்ப்போர் சங்கம்’ என்று பதிவு செய்யப்பட்டது. அது தொடர்ந்து நடைபெற்று வரும் காலத்தில் சங்க உறுப்பினர்கள் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், கோவையில் பல பயிற்சிகள் பெற்றனர். பின் தேசிய மருந்துப் பயிர்கள் வாரியம், விரி
வாக்கக் கல்வி இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு பயன் பெரும் வகையில் கருத்தரங்கு பல்கலைக்கழக வழாகத்தில் நடத்த அனுமதியும் அளித்து உடன் இருந்து வழி காட்ட முன் வந்தனர். அதில் பெரும் பங்கு வகித்தவர்கள் இயக்குனர் டாக்டர் திரு வடிவேல் மற்றும் முனைவர் டாக்டர் திரு.ராஜாமணி அவர்களும் தான். அவர்களுடன் இணைந்து 16-3-2009 ல் இச்சங்கமும் பல விவசாயிகளை ஒன்று திரட்டி நல்லதொரு மூலிகைக் கருத்தரங்கு பொருட்காட்சி ஹால் எண். 4ல் ஒரு நாள் நடைபெற்றது. அதன் விபரம் வருமாறு-

தேசிய மருந்துப் பயிர்கள் வாரியம், மருந்துப் பயிர்கள் தகவல் மையம், சேர்ந்து விரிவாக்க கல்வி இயக்கம் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை-641003 ல் பொருட்காட்சி வளாகம் ஹால் எண் 4 ல் முதல் தொடக்க க்கூட்டம் சிறிது கால தாமதமாகவே 11.30 மணிக்கு மேல் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு இயக்குனர் டாக்டர் திரு வடிவேல் அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் வரவேற்க வந்திருந்தார். ஏ.வி.பி. பத்ம ஸ்ரீ கிருஷ்ணகுமார் சிறப்புறையாற்ற வந்திருந்தார். கோவை மாவட்ட மூலிகை வளர்ப்போர் சங்கத் தலைவர் திரு தேவராஜன் வந்திருந்தார்.

கடவுள்வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. முனைவர் டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மூலிகைபற்றி விளக்கம் அளித்தார். காட்டில் கிடைக்கும் மூலிகைகள் குறைவால் மூலிகை வியாபார நோக்குடன் வளர்க்கப்படுவதைப் பற்றிக் கூறினார். பின் தலைமையேற்ற திரு வடிவேல் இயக்குனர் அவர்கள் ஆதிகால வாழ்க்கை, சித்த நூல்கள், வான சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், ஞான சாஸ்திரம் பற்றி விளக்கிக் கூறி முதலில் பாரம்பரிய வைத்திய முறை பின் ஆயுர் வேத மருத்துவம், யோகா, தியானம், ஆன்மா, தவம், வைத்தியம் சேர்ந்து ஒன்று பட்டால் பூர்த்தியாகிறது மனித வாழ்க்கை என்றார். மனிதனின் உணவுப் பழக்கங்களைக் கூறினார்.ஆறு சுவை, பரிமானம், தியானம் மனிதன் மனம் சுத்தமாக உள்ளம் பக்குவப்பட்டால் மன அழுத்தம், கனம் உடல் தன்மை இவைகளை மாற்ற வல்லது என்றார்.

பின் பத்ம ஸ்ரீ கிருஷ்ணகுமார் (ஏ.வி.பி.) பேசினார். ஆயுர்வேத மருத்துவம் காலதாமதமாகும் அலோபதி மருத்துவம் விரைவில் குணமாகும் ஆனால் நோய் திரும்பவும் வர வாய்ப்புள்ளது. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் திரும்பி வராது. மூலிகைகள் மண்ணுக்குத்தக்கவாறு வளரும் அதன் வீரியமும் அதற்க்கேற்ப இருக்கும். வியாபார நோக்குடன் வளர்க்கும் போது அதன் தன்மை சிறிது குறையும் என்றார். அமரிக்கர்கள் பலர் ஏ.வி.பி. ல் சிகிச்சை பெறுகிறாரகள் அவர்கள் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்றார்.

பின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜெகத்குரு நாகானந்த ஸ்வாமிகள் என்பவர் ஓலைச்சுவடியில் மூலிகை மருத்துவம் எழுதி வைத்திருப்பதைப்ப்பற்றிக் கூறினார். பல விளக்கங்கள் கூறினார். பின் மதிய உணவு இடைவேளை.

மதிய உணவு இடைவேளை ஒரு மணி நேரத்திற்குப்பின் மாலை 2-30 க்கு மீண்டும் தொடங்கியது. கிரீன் கோவை ஆனகட்டி திரு இராமன்ஜி அவர்கள் பேசும் பொது அங்கு 101 வகை மூலிகைப் பயிர்கள் இருப்பதாகக் கூறினார். மேலும் மூலிகை வாசனை எண்ணெய் எடுக்கும் யந்திரம் அமைத்திருப்பதாகக் கூறினார். இதன் மூலம் எண்ணெய் எடுக்கும் மூலிகைகள் 1.ரோஸ்மேரி 2. பச்சோலி.
3. பாம்ரோசா. 4. லைம் கிரேஸ். 5. துளசி. 6. திருநீர்பச்சை. 7. ஜெரேனியம். 8. மருகு. ஆகியவை என்றார்.

பின் ஆழியார் சித்தா டாகடர் திருமலைசாமி அவகள் மருந்தே உணவு, உணவே மருந்து பற்றி விளக்கம் அளித்தார்.

பின் தேவராஜன் அவர்கள் எல்லோருக்கும் நன்றி சொல்லி அடுத்த மாதம் இதே இடத்தில் இரண்டாவது கூட்டம் 16-4-2009 அன்று தொடர்ந்து நடக்கும் என்றார். பின் நாட்டுப்பண்ணுடன் கூட்டம் இனிதே முடிவுற்றது.
-----------------------------------------------(தொடரும்)

Thursday, March 19, 2009

மரம் ஒரு தகவல்


தொழிற்சாலைக்கு மரம் தேவையா?

“மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வனக்கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையம், வேளாண்மை பல்கலைக்கழகம், இந்திய வேளைண்மை ஆராய்ச்சி குழுமத்துடன் இணைந்து, ‘தொழிற்சாலைகளுக்குத் தேவையான வேளாண் மரங்கள் வளர்ப்பு’ பற்றி வனக்கல்லூரியில் வரும் 20, 21 தேதிகளில் இரண்டு நாள் இலவசப் பயிலரங்கம் நடத்துகிறது. இதில் மரக்கூழ்காகித, தீக்குச்சி மரங்கள் வளர்ப்பு, அதன் பயன்கள் மற்றும் பயறிசிகள், இக்கல்லூரி வஞ்ஞானிகளால் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி முகாமில் மரங்கள் வளர்ப்பு முறை, உரங்கள், நீர் நிர்வாகம், மண்ணின் தன்மை, பூச்சி நோய் கட்டுப்படுத்தல் பற்றி பயிற்சி அளிக்கப்படுகின்றன. மேலும் மரம் சார்ந்த ஒப்பந்த முறை சாகுபடி பற்றியும், சந்தை விலைபற்றியும் விளக்கப்படுகிறது. கோவை, ஈரோடு, கரூர் நாமக்கல் மற்றும் வேலூர் மாவட்ட விவசாயிகளிக்கு, இத்திட்டத்தின் மூலம் மாதிரிப் பண்ணைகள் அமைப்பதற்கான திட்டங்களும் தெரியப்படுத்தப்படும்.

எனவே, இப்பயிற்ணி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள், தங்கள் பெயரை வனக்கல்லூரி முதல்வரையோ திட்ட அலுவலர் டாக்டர் திரு பார்த்ததூபன் அவர்களையோ தொல்பேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். முனைவர் டாக்டர் திரு பார்த்தீபன், திட்ட அலுவலர் மற்றும் இணைப் பேராசிரியர் ( வனவியல்) மர இனப்பெருக்கவியல் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம்-641 301, போன் 04254 -222398,222010, மொபைல் போன்: 94435 05844 என்ற விலாசத்திற்கு தொடர்பு கொள்ளவும்.”

இது விவசாய நண்பர்களுக்கான தகவல் அறிவிப்பு.

Friday, March 13, 2009

தகவல் மையம்.

மருந்துப்பயிர்கள் தகவல் தொடர்பு மையம்.

நேர்முகப்பயிற்சி.
தமிழ் நாட்டில் உள்ள மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு நேர்முகப் பயிற்சி அளித்தல்.

மருந்து பயிர்கள் சாகுபடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
மருந்துப் பயிர்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல்.

ஒப்பந்த சாகுபடியை ஊக்குவித்தல்.

மருந்துப்பயிர்களில் ஒப்பந்த சாகுபடி முறையை ஊக்குவிக்க, மூலிகைப் பயிர்கள் பயிரிடுபவர்கள், விற்பனை மற்றும் கொள்முதல் செய்பவர்கள், பதப்படுத்துபவர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோர்களுக்கிடையேயான நேர்முக பரிவர்த்தனையை ஏற்படுத்துதல்.

மூலிகை சாகுபடி கணக்கீடு.

தமிழ் நாட்டில் மருந்துப் பயிர்கள் வகை வாரியாக சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தியை கணக்கீடு செய்தல்.

மூலிகை சாகுபடி மேம்பாடு.

மருந்துப்பயிர்கள் உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டு வரும் தன்னார்வு அமைப்புகள், விவசாய குழுமங்கள், மூலிகைப் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவைகளை ஒருங்கிணைந்து மூலிகைப் பயிர்களின் சாகுபடியை மேம்படுத்துதல்.

தகவல் தொடர்பு மையம்.

மாநிலத்தின் பல் வேறு மாவட்டங்களில் இருந்து வரும் விவசாயிகளுக்கு மருந்துப்பயிர்கள் சம்பந்தமான சந்தேகங்களை நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் நிவர்த்தி செய்தல்.

வெளியீடுகள்.

மருந்துப்பயிர்கள் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் குருந்தகடுகள் ஆகியவற்றை வெளியிடுதல்.
--------------------------------------------------------------

விருவாக்க கல்வி இயக்கம்.
தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக் கழகம்.
கோயமுத்தூர் -641003.
போன்-0422 6470425, 6611365, 6611284.
----------------------------------------------------------------------
-----------------------------------------(விவசாயம் தொடரும்)

Tuesday, March 3, 2009

மரம் வளர்ப்போர் விழா.



இடம்: வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவனம்,
கவுளி பிரவுன் ரோடு, ஆர்.எஸ்.புரம், கோவை-2.

நிகழ்ச்சி நிரல்
7-3-2009 சனிக்கிழமை காலை 9 மணி.
மரம் குறித்த தகவல் மையம் திறப்பு விழா.
திரு.ஜெகதீஷ் கிஷ்வான், டைரக்டர் ஜெனரல் ICFRE புதுடெல்லி.
காலை 11.15 மரம் வளர்ப்போர் விழா துவக்கம்.
தலைமை-முனைவர் N. கிருஷ்ணகுமார், இயக்குனர் IFGTB கோவை.

புத்தகங்கள்வெளியீடு: முனைவர் C.K.ஸ்ரீதரன் IFS
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சென்னை.

11.45 - 13.45 வரை கருத்தரங்கு - 1
‘தொழிலகங்களுக்கு தேவையான மரப்பயிர்கள் வளர்ப்பு முறைகளும் மேலாண்மையும்’

தலைமை: முனைவர். குமாரவேலு IFS
முன்னாள் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், சென்னை.

பகல் 14.00 மணி உணவு இடைவேளை பின்
கருத்தரங்கு-2

‘ஒருங்கிணைந்த பூச்சிகள் மற்றும் பயிர் நோய் மேலாண்மை’
தலைமை-திரு.ஜாபரி IFS, இயக்குனர், தமிழ்நாடு வன அகாடமி.
மாலை 17.30 க்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவு.


8-3-2009 ஞாயிற்றுக் கிழமை காலை 09.30 பகல் 12.00 வரை.
கருத்தரங்கு-3.
‘தொழில்களுக்கும் தொழிலகங்களுக்கும் தேவையான பண்ணைக் காடுகள்’
தலைமை: திரு.V.இருளாண்டி IFS தலைமை வன பாதுகாவலர், வன விரிவாக்கம், சென்னை.

மதியம் 12.30 - 13.30 வரை கருத்தரங்கு-4
‘தரமான நாற்றுகள் உற்பத்திக்குத் தேவையான விதை நேர்த்தியும் நாற்றுப் பண்ணை தொழில் நுட்பமும்’

தலைமை: முனைவர் N. கிருஷ்ணகுமார், IFS. இயக்குனர், IFGTB.

13.30 - 14.30 வரை மதிய உணவு இடைவேளை.

பகல் 14.00 முதல் 15.45 வரை கருத்தரங்கு-5.
‘பண்ணைகாடு வளர்ப்பில் விவசாயிகளின் அனுபவங்கள்’
தலைமை: திரு. K.சிதம்பரம் தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி)
திரு. K.தேவராஜன், தலைவர், மரம் வளர்ப்போர் சங்கம்.
‘விவசாயிகளின் அனுபவங்கள்.’
திரு.மது இராமகிருஷ்ணன், பொருளாளர், மரம் வளர்ப்போர் சங்கம்.
‘வேளாண் பண்ணைக்காடுகள்’
திரு.நாராயணசுவாமி, கொளைகை பரப்புச் செயலாளர், மரம் வளர்ப்போர் சங்கம். கோவை.
‘பண்ணை முறையில் புதிய நிர்வாக வாய்ப்புகள்’ பற்றிப் பேசுவார்கள்
17.00 மணிக்கு நிறைவு விழா.
அனைத்து விவசாயிகளையும் கலந்து பயனடைய வேண்டுகிறோம்.

Sunday, February 22, 2009

காட்டாமணக்கு பயிற்சி


விவசாய அன்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.

வரும் 26-02-2009 வியாளக்கிழமையன்று வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள உயரி எரிபருள் சிறப்பு மையத்தில், ‘காட்டாமணக்கு சாகுபடி மற்றும் பயோடீசல் உற்பத்தி’ குறித்து ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. இதற்கு 150 விவசாயிகள் மட்டுமே தேர்வு செய்ய இருப்பதால் ஆர்வமுள்ள விசாயிகள் தங்கள் வருகையை முன் கூட்டியே கடிதம் மூலம் ‘ பேராசிரியர் மற்றும் முதன்மை அலுவலர், உயிரி எரிபொருள் சிறப்பு மையம், வேளாண் பறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூர்-641003, தொலைபேசி- 0422 6611376’ என்ற முகவரியில் தொடர்பு கொண்டு முன் பதிவு செயுது கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(குறிப்பு- பயிற்சியின் போது மதிய உணவு, கையேடு, போக்குவரத்துச் செலவுகள் இலவசமாக வழங்கப்படும்.)

Thursday, February 19, 2009

மூலிகை தகவல் மையம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய மருந்துப்பயிர்கள் வாரியம் இணைந்து மருந்துப் பயிர்கள் தொடர்பு மையம் வழியாக மருந்துப்பயர்கள் சாகுபடியாளர்களுக்கும் இதற்குத் தொடர்புள்ள நிறுவனத்தினர்களுக்கும் இடையே ஒரு பாலம் போன்று இன்று 18-02-2009 ஒரு நாள் கருத்தரங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் தொகுப்பு பின்வறுமாறு.

அண்ணா அரங்கில்வந்து அமர்ந்திருந்த விவசாயிகளையும், நிறுவனங்களிலிருந்து வந்திருந்த உறமையாளர்கள் மற்றும் அலுவலர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மற்றும் துறைசார்ந்த மாணவர்களையும், சிறப்புறையாற்ற வந்த திரு ராஜ்குமார் ஐ.ஏ.எஸ்., அவர்கள், டாக்டர் வடிவேல் அவர்கள் டாக்டர் திரு. பால்ராஜ், அனைவரையும் டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் வரவேற்றார். மேலும் இக்கூட்டத்தின் நோக்கம் பற்றி விவறித்தார்.

பின் திரு ராஜ்குமார் ஐ.ஏ.எஸ்., அவர்கள் சிறப்புறை யாற்றினார். இந்தியாவில் மட்டும்தான் ஆறு வித மருத்துவங்கள் நடைமுறையில் உள்ளது அவை ஆயுர் வேதம், சித்தா, யுனானி, யோகா, இயற்கை வைத்தியம் மற்றும் அலோபதி மருத்துவ முறைகள் பற்றி விவரித்தார். காடுகளில் சேகறிக்கும் மூலிகைகள் குறைந்தவுடன் மூலிகைகளை வியாபார நோக்குடன் விவசாயிகள் பயிர் செய்ய ஆரம்பித்தனர். மூலிகைகளுடன் உலோகங்களையும் சேர்த்து மருந்துகள் தயார் செய்தனர் என்றும் சில மூல்லிகைகள் பற்றியும் விளக்கினார். பின் ஒரு திருமணத்தில் விடைபெரும் போது தேங்காயிக்குப் பதிலாக பழவகை நாற்றுகள் மற்றும் மூலிகை நாற்றுகள் வைத்து விருப்பமுள்ள நாற்றை அளித்துள்ளதாகச் சொன்னார். அது ஒரு நல்ல உத்தி என்றார்.

அடுத்து இயக்குனர் டாக்டர் திரு. வடிவேல் அவர்கள் கூட்டத்தின் நோக்கம் பற்றி விவறித்தார். இறுதியாக டாக்டர் திரு ராஜாமணி அவர்கள் நன்றி கூறினார். தேனீர் இடைவேளைக்குப் பின் நிறுவனங்களிலிருந்து வந்திருந்தவர்கள் பேசினார்கள்.

முதலில் டாம்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் திரு பால்ராஜ் பேசினார். சுமார் 200 வகை மூலிகைகள் வாங்கி மருந்துகள் தயார் செய்வதாகச் சொன்னார். மூலிகைப் பொருள்கள் தேவையுள்ளத்தை டெண்டர் முறையில் இதுவரை வாங்கப்பட்டதாகவும் தற்போது மருந்துப் பயிர்கள் கூட்டுரவு சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், மற்றும் ஒருகிணைந்த சொசைட்டி மூலமாக டெண்டர் இல்லாமலேயே வாங்குகிறார்கள். அவை பச்சையாகவும் காய்ந்த தாகவும் வாங்கப்படுகிறது. பச்சையாக வாங்கப்டுவதை அன்று மாலையே கிடைக்க வேண்டுமாம். அதில் போக்குவரத்துச் செலவையும் கூட்டிக் கொள்ள வேண்டுமாம். பொருள், அளவு, தரம் விலை நிர்ணையம் செய்து சென்னையில் கிடைக்கும் படி செய்ய வேண்டுமாம்.

பின் திரு ரவிக்குமார் பேசும் போது15 வகை மூலிகைகள் அவர்கள் நிறுவனம் (நேசனல்) வாங்கிக் கொள்வதாகச் சொன்னார். அவர்களது அலுவலகம் ஓசூர் தெங்கனிக் கோட்டையிலும், பெங்களூரிலும் இருப்பதாகச் சொன்னார். சிறியாநங்கை, மணத்தக்காளி, துளசி, நீர்பிரம்மி, சிறுகுறிஞ்சான் போன்றவை தண்டு, வேர், பட்டை போன்று காய்ததாக நல்ல தரம் வேண்டும் என்றார். ஒப்பந்த சாகுபடியும் உண்டாம். தெங்கினிக்கோட்டையில் 85 ஏக்கர் ஆர்கானிக் முறையில் மாடல் பாம் போட்டுள்ளார்களாம்.

லச்சுமி சேவா சங்கத்திலிருந்து டாக்டர் திரு. ஹரிகிருஷ்ணா பேசுகையில் 220 வகை மூலிகைகளை டிரேடர்ஸ் மூலம் காய்ந்த தாக வாங்குகிறார்களாம். 10 குழிக்களிடம் பச்சிலையாகவும் வாங்கி 300 வித மருந்துகள் தயார் செய்கிறார்கள். நெல்லி கிலோ
ரூ.40-00க்கு எடுக்கிறார்கள். அமுக்கிராவில் தரம் இல்லையாம், தான்றிக்காய் காயவைக்கும் போது மணல் கலந்துள்ளதால் தரம் இல்லையாம்.

எஸ்.கெ.எம். சித்தா மற்றும் ஆயுர்வேதிக் மெடிசன்ஸ் நிறுவனத்திலிருந்து திரு.விஸ்வனாதன் எம்.எஸ்.சி. அவர்கள் பேசினார். அவரது போன்-0420-2500590, 2501238, அலை பேசி-9443310539. அவர் 300 வகை ஆயுர் வேத மருந்துப் பொருட்கள் பச்சையாகவும், காஞ்சதாகவும் வாங்கிக் கொள்கிறார்கள். ஆறு குடும்பங்கள் தேவையான பச்சை மூலிகைகளைக் கொடுக்கிறார்களாம். அவை சில நிலக்கடம்பு, நிலாவரை, கரிசாலை, கண்டங்கத்திரி, துளசி, பேய் புடல், சித்தாமுட்டி, வில்வம், கொட்டக்கரந்தை, ஈஸ்வரமூலி முதலியன. மதியம் உணவு இடைவேளை 13.30 மணிமுதல் 14.30 மணிவரை இருந்தது.

பின் மர்ந்துகூர்கன் பயிரிடுதல் பற்றி அதன் நிறுவனர் திரு.பழனிவேல் பேசினார். அதில் விவசாயிகளுக்கு ஒப்பந்த சாகுபடியில் நன்மை பற்றிக் கூறுனார். ஆத்தூர் ஏரியாவில் விவசாயிகள் நன்கு பயனடைவதாக க்கூறினார். பின் சிரஞ்சீவி ஹெர்பல்ஸ் திரு.குமரேஸ் மேலும் விளக்கமளித்தார். பின் சென்னா பற்றி திரு.ராமச்சந்திரன் எடுத்துறைத்தார்.கண் வெளிக்கிழங்கு பற்றி பயிரிடுதல், மகரந்தச்சேர்க்கை செய்தல், காயவைத்தல் பற்றி விளக்கினார்கள், கள்ளிமந்தையில் அது பிறித்தெடுக்கும் யந்திரம் பற்றி ஆய்வில் உள்ளதாகச்சொன்னார்கள். அதன் விலை ஏற்றம் சரிவு பற்றிக் கூறினார்கள். ரோஸ்மேரி செடி வளர்ப்பில் பர்கூர் ஏரியாவில் விவசாயிகளுடனும், சுயுதவிக் குழுக்களும் மயிராட நிறுவனம் இணைந்து பச்சை இலையை ரூ.13-00 க்கு வாங்கி அதில் தாமரைக்கரையில் உள்ள எண்ணெய் எடுக்கும் யந்திரம் மூலம் எடுத்து கிலோ எண்ணெய் ரூ.1500-00 விற்கிறார்கள். நாற்று ஒரு ஏக்கருக்கு 16500 தேவைப்படுமாம். ஒன்றரைக்கு ஒன்றரைஅடி இடைவெளியில் நட வேண்டுமாம். மானாவாரியாகவும், தண்ணீர் பாச்சியும் நடலாம். வருடம் 4 அறுவடை செய்யலாம். நோய் வேர் புழு, இலைஅழுகல் மட்டுமே அது மழைகாலங்களில் தானாம். அதற்கு மருந்து அடிக்கிறார்கள். விசாயிகள் நல்ல லாபம் அடைகிறார்களாம்.

அடுத்து சோத்துக்கத்தாழை பற்றி எட்டையபுரத்தில் யூனிட் வைத்துள்ள திரு.சவுந்திர்ராஜன் பேசினார் அதில் வாக்கு வாதங்கள் வந்தன. விவயிகள் பயிர் செய்து நட்டம் அடைந்த தாக. சிலர் ஏமாத்துவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. சோற்றுக்கற்றாழை மடல் வெட்டி 3 மணி நேரத்திற்குள் தொழிற்சாலைக்கு வந்தால் தான் அதிலிருந்து வேதியப் பொருட்கள் பிறித்தெடுக்க முடியுமாம். இவர் கிலோ ரூ.2-50க்கு எடுத்துக் கொள்கிறார். 200 கிலோமீட்டருக்குள் எடுக்கிறார்.

சீனித்துளசி ‘சிவியார்’ மறுபடியும் புத்துயிர் பெற்றுள்ளதாகவும் கிலோ ரூ.20-00 விற்கிறதாம். ஒரு ஏக்கருக்கு 40,000 நாற்றுகள் தேவையாம், 3 வருடப் பயிர் வருடத்தில் மூன்று அறுவடை. ஏக்கருக்கு 3 - 3.5 டன் கிடைக்குமாம்.

பின் திரு.சேசாசாய் ஹைதராபாத் காரர் ‘பெஸ்டு என்ஜினீரிங் டெக்னாலொஜிஸ்’ மருத்துவ பயிர்களிலிருந்து எண்ணெய் எடுக்கும் யந்திரங்கள் பற்றி விளக்கம் அளித்து அதை விற்றபதாகச் சொன்னார். அவரது போன்-040-65908498 அலை பேசி. 09391057812.

இறுதியில் டாக்டர் திரு. ராஜாமணி காலை முதல் மாலை வரை நடந்த நிகழ்வுகளைச் சுருக்கமாகச் சொல்லி வந்த அனைவருக்கும் நன்றி கூறி கூட்டம் இனிதே முடிவுற்றது.

தேசிய மருந்து பயிர்கள் வாரியம்
மர்ந்து பயிர்கள் தொடர்பு மையம்
விருவாக்க கல்வி இயக்கம்.


nmpbfc@tnau.ac.in
போன்- 6470425, 6611365, 6611284 ஆகியன.

--------------------------------------(விவசாயம் தொடரும்.)

Monday, February 16, 2009

இரங்கல் செய்தி.




அன்பார்ந்த விவசாய நண்பர்களே மற்றும் கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்க அன்பர்களே !



இன்று 16-02-2009 காலை 09.10 மணி அளவில் நம் சங்க அங்கத்தினர் மற்றும் மூலிகை விரிவுறையாளர் சித்தா டாக்டர் திரு.லச்சுமணன் அவர்கள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெறிவித்துக் கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோமாக. அவருக்கு ஒரு மகனும், நான்கு பெண்களும் உள்ளார்கள். அவரது பூத உடல் கொங்கு நாடு அறிவியல் கல்லூரிஅடுத்த லெவல் கிராசிங்குக்கு முன்னால் இடது புரம் அவரது மகன் முருகன் வீட்டில் உள்ளது. நாளை 17-02-2009 காலை துடியலூர் மின் மயானத்தில் காலை 0900 முதல் 1000 மணிக்குள் எரிக்கவுள்ளார்கள் எனபதைத் தெறிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள,
குப்புசாமி.க.பொ.
கோவை-641037.
:9487283644
Kuppu6@gmail.com
16-02-2009.

Sunday, February 8, 2009

ஆறாம் தேதி சங்கமா, சங்கமமா?

எல்லாருக்கு வணக்கமுங்கோ. அது என்னுங்கோ ஆறாம் தேதி சங்கம்? அது என்ன ஆத்துலே ஓடர சங்கமுங்களா? சங்கனூர் பள்ளத்திலீங்களா? நொய்யலாற்றுலீங்களா? சாக்கடைதாங்க ஓடுது. எங்கெ சங்கமமாகிறது. அதோபாருங்கோ கருப்பு அம்பாசிடர் கார்லே வர்றாருங்கோ அவருதான் இந்த சங்கத்துத் தலைவருங்கோ. அவரு பேரு தேவராஜனுங்கோ. அவருசங்கோ காளப்பட்டீலே இருக்குதுங்கோ. இங்கே ஹோம்சென்ஸ் காலேஜுக்கு அடுத்த கேட்லே பாரஸ்டு ஆப்பீசுலே ஒட்டீட்டாருங்கோ. அங்கே முதல் மாடி ஆலுலே இன்னைக்குப் பத்துமணிக்கு மீட்டிங் ஆரம்பிக்கப் போராங்களாம். அங்கே போனா கூட்ட கொஞ்சமாத்தா இருந்துதுங்கோ. தலைவரு எல்லாத்தையும் பார்த்துவணக்கம் சொன்னாருங்கோ. அப்பொறோ எல்லாத்தையும் பார்த்து எல்லாரு வெளியே உள்ள ரண்டு ரிஜிஸ்டரிலும் விலாசமெழுதி, போன் நெம்பரு எழுதி கையெழுத்துப் போடுங்கோண்ணு சொன்னாறு. அங்கிருந்த பாரஸ்டர் புஸ்பாகரன் ‘யாருக்காவது அடுத்த வருச நாத்து என்ன எவ்வளவு வேணூண்ணு அடுத்த ரிஜிஸ்டருலே எழுதுகோனாறு.’ அவரு தேசிய அளவுலே மரநட்டதுக்காக துணைஜனாதிபதியிடம் பாராட்டப்பத்திரம் வாங்கியவரு. விவசாயிகொ வந்திட்டே இருந்தாங்கோ. அப்புறோ ஒரு பதினொரு மணிசுமாருக்கு சாமி பாட்டுப் பாடினாங்கோ. உள்ளிருந்த பேனரிலே ‘கோயமுத்தூர் மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கம். மாதாந்திர கூட்டம் நாள் 6-2-2009’ அப்படீன்னு எழுதியிருந்தது.

அதக்கப்பறோ தலைவரு பேசினாரு. எல்லாத்தையும் வரவேற்றாருங்கோ. முக்கியம திரு.உலகநாதன் ஐ.எப்.எஸ். ஐயா, திரு பாலகிருஷ்ணன், நபார்டு வங்கி ஆலோசகரு, திரு.ராஜ்டேனியல், பேராதெனியா பல்கலைக்கழகம், கண்டி ஸ்ரீலங்கா, திரு.கலியபெருமாள் ரேஜ்சரு அப்பரோ ஆழியாறு சித்தா டாக்டர் திரு.திருமலைசாமியையும் ஆலிலேநெறஞ்சிருஞ்ச விவசாயிகள் எல்லாத்தையும் வரவேற்றாரு. அப்புறோ போன மாசம் 27ந்தேதி சில பண்ணைகளுக்கு சுற்றுலா 30 பேரு போயிட்டு வந்ததே சொன்னாறு. அப்போ தாடிக்கார விவசாயி பெரியவரு ‘ஏ நீங்க மட்டும் எங்களுக்கெல்ல சொல்லாமே போநீங்கோ’ அப்படீன்ணு கேட்டாரு. அப்போ தலைவரு வனவரிவாக்கம் 22 பைருக்குத்தா வேன் கொடுத்தாங்கோ அதனாலே அளவாப் போனோ என்றாரு. தலைவரு அவரு வலது கை மற்ற வேண்டியவங்கோ சிலரும் டாட்டாசுமா வண்டிலே போனது பெரியவருக்குத் தெறியாது. பண்ணையிலே பார்த்ததெல்லா வெளக்கினாறு. இதுமாதிரி இன்னும் போகோணுண்ணு சொன்னாறு.

அப்புறோ திரு. ராஜ்டேனியல் B.Sc (விலங்கியல்) அவுரு ‘ஒருகிணைந்த பண்ணைக்கு ஏற்ற ஆடு மற்றும் இதர சிறு பிராணிகள் வளர்ப்பு முறைகள்’ பற்றி நல்ல விளக்கம கிராமத்தாருக்குப் புறியும் படி பேசினாரு. நாட்டுக் கோழி அளவா வளக்கிறதுக்கு 15 அடிக்கு 30 அடி பந்தலு போட்டு சுற்றி 4 அடி சுவருவெச்சு பத்துக் கோழிக்கு ஒரு சேவல் வீத வளக்கணு, பந்தல்லே அவரக்காசெடி உடலா, சுற்றியும் அகத்தி மரம் வெக்கலாம், வெள்ளாடு நாலு பொட்டைக்கு ஒரு கெடா வீத கொடாப்பு வச்சு வளக்கலாண்ணு விளக்கமா மதியம் 1-30 மணிவரை சொன்னாரு.

அப்புரோ திரு.பாலகிருஷ்ணன், B.Sc.,BGL, CAIIB., அவரு நபார்டு வங்கி எப்படிக் கடன் கொடுக்கிறது, யார்யாருமூலமாணு மதிய உணவு எல்லோரும் சாப்பிட்ட பிற்பாடு விளக்கினாறு. ஆனா கொஞ்சம் பேரு சாப்பிட்ட ஒடனே போயிட்டாங்கோ. சாப்பாடு இலவசந்தாங்கோ. அவுரு போனு 9344536407. சந்தேகங்கள் சொல்வாரு. சுயஉதவிக்குழுக்கள் ஆண், பெண் இரண்டு குழுவுமே இருக்கலா 10 லிருந்து 20 பேர் வரை. அதன் நடப்பு முறை, ஆவணங்கள், கடன் பெருதல், திருப்பிக் கட்டுதல், குழு முன்னேற்றம், கடன் வாங்கியவர்கள் தொழில் செய்தல், லாபம், ஒற்றுமை, விழிப்புணர்வுகள் எல்லாம் விளக்கமாகச் சொன்னார்.

அப்புரோ ஆழியாறு மூலிகை நாற்றுப் பண்ணையிலிருந்து வந்த சித்தா டாக்டர் திரு.திருமலைசாமி அவரு ‘பொடுதலை’ அப்பிடீங்கிற மூலிகை செடியின் உபயோகம் பத்தி எல்லா விபரமும் விளக்கம சொன்னாருங்கோ. அதற்கு அடுத்து கலியபெருமாள் ரேஞ்சர் ‘ஆச்சான்’
அப்படீங்கிற ஒரு கெட்டியான மரத்தைப்பற்றி எப்படி வளக்கறது அது உபயோகத்தைப் பத்தியும் சொன்னாறுங்கோ.

பிற்பாடு தீத்திபாளையம் ஸ்ரீபழனியாண்டவர் மில்ஸ் நடத்துர திரு.சரவணன் என்பவரு வேப்பங்கொட்டை கிலோ ரூ.8-00 க்கு வாங்கி சுத்தஞ்செஞ்சு வேப்பெண்ணெய்யும், புண்ணாக்கு விலைக்குக் கொடுக்கராறு. அவரு போனு 984304949, 9442149491. அதக்கப்புரோ திரு. செல்வக்குமார் புதிசா ‘அப்சா80’ அபடீங்கிற பூச்சி மருந்தோட கூட துளி சொட்டுட்டா எல்லாச்செடியிலு நல்ல ஒட்டுமுனு முருங்கத்தழையை வெச்சு காட்டுனாருங்கோ.

அதுக்கடுத்து காரமடையிலிருந்து வந்த திருமதி.வசந்தி ஞானசேகர் M.Sc. (Hort) தோட்டகலை உதவி இயக்குனர் அவுங்கோ தேசிய மூங்கில் இயக்கம் மூலமாக மூங்கில் வளக்கரதுக்கு ஒரு எக்டருக்கு ரூ.8000-00 மானியமாக குடுப்பதாகவும், அதுக்கே சொட்டு நீர் போட 20,000-00 மானியம கொடுப்பதாகவும், ஒரு ஏக்கருலே மாதிரி மூங்கில் பண்ணை அமைக்க ரூ.5000-00 கொடுக்கப்படும் என்று கோவை மாவட்ட விவசாயகளைப் பேர் கொடுக்கச் சொன்னாருங்க, அவரு போனு 9487560154 ங்கோ.

கடசியா புஸ்பாகரன் பாரஸ்டரு ஒரு ஓசனை சொன்னாருங்கோ அதாவது இந்த சங்கத்துக்கூணு ஒரு நாற்றுப்பண்ணை வேணுமினு. உடனே தலைவரு அதுக்கெல்லா சங்கத்திலே பணமில்லை என்றாரு. அப்போ பெரியநாக்கன்பாளையத்திற்கு பக்கத்திலெ உள்ள ஒருத்துரு ஒரு ஏக்கர் நிலம் 3 வருசத்துக்கு சும்மா கொடுப்பதாகச் சொன்னாரு. தலைவரு நாத்து வளத்த பணவேணுமே என்றாரு. உடனே சுற்றுலாவிலே பார்த்த திரு.சுப்பையா விவசாயி ரூ.5000-00 கொடுப்பதாச் சொன்னாரு, பின் ஒரு அம்மா இரண்டாயிரம் கொடுப்பதாச் சொன்னாங்கோ. சரி அடுத்த மீட்டங்கிலே பாத்துக்கலாண்ணு தலைவரு சொல்லிட்டாரு. அப்படி ஒரு மத்திய நாத்துப் பண்ணை அமச்சா எல்லா வசயிகளுக்கு சலீசு விலைலே நாத்துக் கொடுக்கலாமுன்னு தலைவரு சொன்னாரு, அது போக மீதி காசிருந்தா சங்கத்துக்கு சேத்துக்கலாண்ணு சொன்னாரு. புஸ்பாகரன் பாரஸ்டரு அதுக்கு ஆலோசனை கொடுப்பதாகச் சொன்னாறு. அப்பத்தா தோணுச்சு 15 கட்டளையிலே 7 வது கட்டளை நெறவேறப்போகுதூண்ணு நெனச்சேன்.

திடீருனு டாக்டர் ராஜ்மோகன் வந்தாரு அவரு அரப்பியா நாடெல்லா அடிக்கடி போவாறு. வெளிநாட்டுலே பாலைவனத்திலீங் கூட கப்பல்லே மண்ணு கொண்டு வந்து போட்டு பசுமாயான மர வச்சு வளத்தராங்கோன்னு தன் அனுபவத்த கொஞ்ச சொன்னாறு. அப்புரோ தேசிய கீதம் மாலை 6 மணிக்கு எல்லாரும் பாடி கூட்டத்தை முடிச்சாங்கோ. அடுத்த கூட்டொ 6 ந்தேதி மறந்திடாதீங்கோ மத்தியானச்சாப்பாடு உண்டுங்கோ. எல்லாத்துக்கு வணக்கமுங்கோ.

---------------------------(விவசாயம் தொடருமுங்கோ)

Monday, February 2, 2009

பண்ணைச் சுற்றுலா.


கடந்த 27-1-2009 அன்று கோவை வனவிரிவாக்க மையமும், கோவைமாவட்ட மரம் மற்றும் மூலிகை வளர்ப்போர் சங்கமும் இணைந்து ஒரு பண்ணைச் சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தார்கள். விவசாயிகள் சுமார் 25 பேர் தனி வாகனத்தில் கோவை-காந்திபுரத்திலிருந்து காலை 0900 மணிக்குப் புரப் பட்டோம். நானும் தான். சின்னியம்பாளையத்திலிருந்து இருகூர் சாலை வழியாக முதலில் அத்தப்பகவுண்டன் புதூரிலுள்ள கனக்கன் தோட்டம் சென்றோம். அந்தப் பண்ணையின் உரிமையாளர் திரு ஆர்.சுப்பையன் மற்றும் அவரது மகன் குழந்தைவேலு B.Sc, எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்றார். அவருக்கு அங்கு 20 ஏக்கர் நிலம் தண்ணீர் வசதியுடன் உள்ளது. அவரது பெரிய களத்தில் பச்சைப் பசேல் என்று அரப்பு இலை காயவைத்தால் போன்று இலைகள் காய்ந்து கொண்டிருந்தது. பண்ணையார் அதைப்பற்றிக் கூறினார். அவை குதிரை மசால் செடியைச் சிறு துண்டுகளாக வெட்டிக் காயப் போட்டிருப்பதாகச் சொன்னார். பின் அந்த செடி வெட்டும் மோட்டாரால் இயங்கும் சக்கரம் போன்ற இயந்திரத்தைக் காண்பித்து விளக்கினார். வெட்டிய இலைகளை எப்படி காய வைத்து பேக்கிங் செய்வது என்ற இயந்திரத்தையும் காண்பித்தார். பின் அந்த மூட்டைகளை வெவ்வேறு மாநிலங்களுக்கு -விலை இவரே நிர்ணையம் செய்து - அனுப்புவது பற்றிக் கூறினார். பின் அஸ்சாமிலிருந்து வந்த பெண்களும், ஆண்களும் தான் வேலை செய்து கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு மணிக்கணக்குத்தான் கூலி கொடுக்கிரார். ஒரு மணிக்குப் பத்து ரூபாய். தேங்காய் மட்டையுடன் ஒரு கட்டிங் மெசின் மூலம் எழிதில் இயக்கி வெட்டி இரண்டாகப் போடுகிறார்கள். பின் சிறிது காய்த பின் எழிதாக கொப்பறைத் தேங்காய் எடுத்து அதற்கென அமைக்கப்பட்ட வெண் கூடாரங்களில் காயவைத்து எண்ணை எடுக்க அனுப்புகிறார்கள். பின் தென்னை மரங்களில் இழநீர் அதிகம் பிடிக்க தென்னை மரத்தைச் சுற்றி 5 அடி இடை வெளி விட்டு 4 குழிகள் தோண்டி அதில் மண்புழு உரம் போட்டுத் தண்ணீர் பாய்ச்சியுள்ளார். நன்றாகக் காய் பிடித்துள்ளது. பின் தென்னை மரம் ஏறுவதற்கு அவரே ஏணிகள் துண்டு துண்டுகளாக இணைத்து 50 அடி உயர்ம் வரை ஏறி தேங்காய் எழிதில் போட வடிவமைத்துள்ளார். பின் எல்லோரையும் அமரவைத்துத் தேநீர் கொடுத்து அவரது தொழில் நுட்பங்களை விவரித்துச் சொன்னார். கீரை வகைகளை விளைவித்து நல்ல லாபம் எடுக்கலாம் என்றார். இவர் விளைவிக்கும் எந்தப் பொருளுக்கும் இடைத் தரகர் கிடையாது. இவரே நேரடி விற்பனை செய்கிறார். பின் இனிதே 12.15 மணிக்கு விடைபற்றோம். அவரது தொல்பேசி எண்-0422-2627072 அலைபேசி எண்-0936-3228039


அடுத்து சின்னக் குயிலி செல்லும் சாலையில் திரு. தாமோதரன் பாலேக்கர் முறைப்படி விவசாயம் செய்யும் சிறு பண்ணையைப் பார்வையிட்டோம். அவருக்கு அங்கு நாலு ஏக்கர் நிலம் உள்ளது. கிணறு தண்ணீர் வசதியுடன் மோட்டருடன் உள்ளது. ஒரு நாட்டு மாடும் கன்றும் வைத்துள்ளார். நாங்கள் சென்ற போது புதிதாக ஒரு வயலில் பாலேக்கர் முறைப்படி பயிறிட தயார் செய்து கொண்டிருந்தார். வாய்க்காலில் முழைதிதிருந்த 4 வகை செடிகளைக் காண்பித்தார். பின் தக்காளி, அவரை, ராகி, மக்காச்சோழம், துலுக்கமல்லிப்பூச் செடி பயிர்கள் வளர்ந்திருப்பதையும் அதன் கால்வாய்களில் மூடாக்காக கரும்பு சோகைகளை போட்டு அது எப்படி ஈரம் தாக்குப் பிடிக்கிறது என்பதைப் பற்றியும் அதில் எப்படி ஒவ்வொன்றாக மகசூல் கிடைக்கின்றது என்பது பற்றியும் கூறினார். பல தொழில்கள் செய்து கடன் பட்டு இறுதியாக பாலேக்கர் கூட்டத்தில் கலந்து கொண்டு அங்கு வாங்கிய புத்தகம் படி விவசாயம் செய்து கடன் அடைத்ததாகச் சொன்னார். பின் தண்ணீர் பாச்சும் போது அமுதக் கரைசலும் கலப்பது பற்றி விவறித்தார். அவரது நாட்டுமாட்டையும் கன்றையும் பார்த்தோம். பின் அங்கிருந்து விடை பெற்று பல்லடம் அருகேயுள்ள உத்தாண்டிபாளையம் 13.30 மணிக்கு அடைந்தோம்.

உத்தாண்டிபாளையத்தில் திரு.துரைசாமியின் சந்தன பண்ணைத்தோட்டம் (நாற்பது ஏக்கர்) அடைந்த போது பண்ணை வீட்டிலிருந்து அவர் குடும்பத்துடன் எங்களை அன்புடன் வரவேற்றார். சாப்பாட்டு நேரமாக இருப்பதால் முதலில் சாப்பிட்டுப் பின் பண்ணையைச் சுற்றிப் பார்க்கலாம் என்றார். முன் கூட்டியே சொல்லியிருந்த தால் எல்லோருக்கும் சைவ, அசைவ உணவு தயாராக வைத்திருந்தார்கள். ‘பப்பே’ முறையில் எல்லோரும் உணவறிந்தி பின் அமர்ந்து கலந்துறையாடி பத்தாயிரம் சந்தண மரங்களுக்கு மேல் உள்ள இரண்டாண்டு ஆன மரங்களைக் காண்பித்தார். இடையில் சப்போட்டா மரங்கள் காயுடன் காணப் பட்டன. எல்லாவற்றிக்கும் சொட்டு நீர் பாசன் முறை கையாண்டுள்ளார். வியாபாரிகள் சப்போட்டாவை கிலோ 3 ரூபாயிக்குப் பறித்துக் கொள்வதாகச் சொன்னார். பின் கொட்டகை முறையில் ஆடு வளர்பதையும் காண்பித்தார். ஜிம் செய்ய உப கிரணங்கள் அமைத்துள்ளதையும் காண்பித்தார். வேலி இரண்டு அடுக்கு முறையில் போட்டுள்ளார். எல்லாம் சுற்றிப் பார்த்துக் கழைத்து பண்ணை வீடு திரம்பி குளிர்பானம் அளித்ததை அறிந்தி துரைசாமியின் குடம்பதுதாறுடன் விடை பெற்று, நல்ல விருந்தோம்பலை அனுபவித்து 16.30 மணிக்கு மேல் அடுத்த பண்ணைக்குப் புரப்பட்டோம்.

சுல்தான் பேட்டைஅருகேயுள்ள அம்பாள் நர்சரி உரமையாளர் தோட்டத்தில் அமைந்திருந்த திறந்த வெளி பெரிய குளம் அமைத்துருந்ததைப் பார்த்தோம். ஒட்டு அத்தி, சப்போட்டா, புளி ஆகிய வயல்களைப் பார்வையிட்டோம். நர்சரியில் பல்வேறு நாற்றுக்களைப் பார்த்தோம் அதிகமாக தென்னம்பிள்ளை வகைகள் இருந்தன. மாலை ஆறு மணிக்குத் தேநீர் அருந்தி விடை பெற்று கோவை 19.00 மணிக்கு கோவை வந்தடைந்து அவரவர் வீடு சென்றோம். இந்த பண்ணைச் சுற்றுலாவில் ஒரு நல்ல அனுபவம் பெற்றோம்.


-----------------------------------------(விவசாயம் தொடரும்)

Saturday, January 17, 2009

விவசாயிகளுக்கான (மரம்) ஒரு நாள் கருத்தரங்கு


விவசாயிகளுக்கான (மரம்) ஒரு நாள் கருத்தரங்கு.

விவசாய அன்பர்களே நான் 29-12-2008 ம் நாள் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழக வனக்கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையத்தில் (தொலை பேசி 04254-222010) ஒரு நாள் பயிற்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது அதில் கலந்து கொண்டேன். அதற்கு 11 மாவட்டத்தைச் சேர்ந்த 127 விவசயிகள் பங்கேற்றார்கள். அந்தப் பயிற்சியின் பெயர் ‘NATIONAL AGRICULAURAL INNVATION PROJECT’ (NAIP) என்பது. அதில் வனமல்லாத நிலங்களில் (தரிசு) மரங்களை வளர்த்து தமிழ் நாட்டுத் தொழிற்சாலைகளுடன் ஒப்பந்த முறையில் விற்றுப் பயன் அடைதல் பற்றியது. அதற்காக சேசாய் பேப்பர் மில், தமிழ்நாடு காகிதத்தொழிற்சாலை மற்றும் வாசன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து அதிகாரிகள் வந்து விளக்கம் அளித்தார்கள். வனக்கல்லூரிகளில் உள்ள விஞ்ஞானிகள் டாக்டர் பார்த்தீபன்,(9443505844) டாக்டர் சுரேஸ், டாக்டர் நடராஜன் மற்றும் டாக்டர் கிருஷ்ணவேணி ஆகியோர் சவுக்கு, தைலமரம் மற்றும் பெருமரம் பற்றி நாற்று உற்பத்தி முதல் மரம் வெட்டும் வரை முழுவிழக்கம் அளித்தார்கள். மிக்க பயனுடையதாக இருந்தது. தற்போது 5 மாவட்டங்களைத் தேர்வு செய்து அதில் 200 விவசாயிகளுக்கு ஒப்பந்த முறை சாகுபடியில் பயன் அளிக்க உள்ளார்கள். அந்த மூன்று மரங்களைப் பற்றி விபரங்கள் அளிக்க உள்ளேன். சவுக்குமரம், தைலமரம், மற்றும் பெருமரம் பற்றிய சாகுபடியும் நிர்வாகம் பற்றி தெறிந்து கொள்வோம்.

சவுக்குமரம்.

சவுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசோரினா அக்குஸ்டிபோலியா இதை வணிகப்பெயராக கரிமரம் என்றும் சொல்வர். இந்த மரம் 40 மீ. உயரம் வரை வளரும். சுற்றளவு 180 செ.மீ. கொண்டதாக இருக்கும். இது கடற்கரைப்பகுதிகளில் நன்கு வளரும், வேறு இடங்களில் வரட்சியைத் தாங்கியும் வளர்க்கூடியது. இது மணல் கலந்த செம்மண், செம்மண், உப்புமண், சுண்ணாம்பு மற்றும் அமிலமண் பகுதிகளில் வளரும். இதற்கு நைட்ரஜன் ஏற்கனவே இருப்பதால் தேவைப்படாது. இதை விதை மூலம் இனப்பெருக்கம் செய்வதைவிட விதையில்லா இனப்பெருக்கம் என்ற கன்ற வழி பெருக்கம் (Clonal propagation) சிறந்ததாகும். நாற்றுக்கள் தயார் செய்து 4 x 4 லிருந்து 6 x 6 அடி அளவு வைத்து நடுவது நல்லது. இடைவெளி 0.80 லிருந்து 1 மீட்டர் வரை நடலாம். முறைப்படி உரம் இட்டு தண்ணீர் பாச்ச வேண்டும். மரத்தின் முக்கால் பகுதிக்கு கீழ் உள்ள பக்க க்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் 6 - 12 மாதங்களில் நல்ல கழிகள் கிடைக்க வழிவகை செய்யலாம். பயிர் பாதுகாப்புக் கையாள வேண்டும்.

சவுக்கின் அனைத்துப்பகுதிகளும் பயன்படுபவை ஒரு எக்டருக்கு 125 லிருந்து 150 டன் மூன்று ஆண்டுகளுக்கு 4 x 4 அடி இடைவெளியிலோ 5 x 5 இடைவெளியிலோ நடுவதன் மூலம் பெறலாம். இந்த வளைச்சலை சிறந்த நீர்நிர்வாகம், உர நிர்வாகம் மூலமும் மேம்படுத்தலாம்.

சவுக்கு ஓராண்டு பயிராக இருக்கும் போது வேளாண்மைப் பயிரகளில் குறிப்பாக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்ப்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்து பயிரான எள் கடின மண்ணில் பயிறு வகைகளையும் ஊடுபயிராகப் பயிரிடலாம். இம்மரம் மண் ஆரிப்பைப் தடுக்கும். இதன் இரசக்தி 4950 கலோரி கிலோவுக்கு.

சவுக்குமரத்தை சாகுபடி செய்தால் பதிவு செய்தல் மரம் உள்ள இடத்தில் வந்து அறுவடை செய்து டிரேன்ஸ்போர்ட் ஆகியவை நிர்வாகமே இலவசமாக ஏற்றுக்கொள்ளும் விலை டன்னுக்கு ரூ.1800-00 வீதம் எடுத்துக் கொள்வார்கள்.
---------------------------------------------------------------------------

தைலமரம்.

இது யுகலிப்டஸ் மிர்டேசியே (Myrtacea) குடும்பவகை மரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இம்மரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்ட அதிக விளைச்சலைத் தரும் எரிபொருள். மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளிக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிடப் பட்டது.

தைலமரம் விரைவாகவும், உயரமாகவும் (20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு வரை வளர்க்கூடியது. இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இம்மரத்தின் இலைகள் கடினத்தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்புடையவை. இம்மரமானது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிங் பூக்கும். தைல மரம் வண்டல், சரளை, மற்றும் சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரக் கூடியது.

இதை விதை மூலம் இனப்பெருக்கம் செய்வதைவிட விதையில்லா இனப்பெருக்கம் என்ற கன்ற வழி பெருக்கம் (Clonal propagation) சிறந்ததாகும். நாற்றுக்கள் தயார் செய்து 3 மீ x 1.5 மீ லிருந்து 3 மீ x 2 மீ அளவு இடைவெளி வைத்து நடுவது நல்லது. 4-6 ஆணைடுகளிங் அறுவடை செய்யலாம். மரம் வெட்டிய பின் மறுதாம்புகள் வளரும் 4-5 தாம்புகள்த் தவிர மற்ற அனைத்துத் தாம்புகளையும் நீக்கிவிட வேண்டும். இரண்டாவது தாம்புடன் தோண்டிவிடலாம். மேலும் விட்டால் வீரியம் இருக்காது.

பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்படுத்தும் முறையில்-தண்டு துளைப்பான், இலை மிடிச்சு, கரையான், தண்டு துரு நோய், அளஞ்சிவப்பு நிறநோய் ஊதா தோய் மற்றும் பழுப்பு நோய் ஆகியவைகளைத் தடுக்க மருந்துகளைப் பயன்படுத வேண்டும்.

நான்கு முதல் ஐந்து வருடங்களில் தைல மரம் அறுவடை செய்யப்படும். நல்ல மண் வளம், நீர் வசதியுள்ள இடங்களில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்கும். இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 4-5 ஆண்டுகள் இடைவெளியில் ரூ.75,000-00 வரை வருவாய் பெறலாம்.

தைல மரத்தை சாகுபடி செய்தால் பதிவு செய்தல் மரம் உள்ள இடத்தில் வந்து அறுவடை செய்து டிரேன்ஸ்போர்ட் ஆகியவை நிர்வாகமே இலவசமாக ஏற்றுக்கொள்ளும் விலை டன்னுக்கு ரூ.2000-00 வீதம் கொடுப்பார்கள்.

பெரு மரம்.

பீநாரி என்றழைக்கப்படும் தீக்குச்சி மரத்தின் தாவரவியல் பெயர் அய்லாந்தஸ் எக்செல்சா (Ailanthus excelsa) இந்த மரம் சைமரூபியேசி என்ற தாவரக்குடும்பத்தை சார்ந்தது. மொலுகஸ் தீவில் இதே இனத்தைச் சார்ந்த மற்றொரு மரத்திற்கு இடப்பட்ட பெயரான அய்லாந்தஸ் இம்மரத்திற்கும் சூடப்பட்டுள்ளது. இம்மரம் வறண்ட பகுதிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். நம் நாட்டில் குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப் ஒரிசா மற்றும் உத்திரப்பரதேசம் ஆகிய மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் எல்லா பகுதிகளிலும் இம்மரதை வளர்த்து பயன் பெறலாம்.

பெருமரத்தின் இலை தழைகளை கால்நடை தீவனமாகப் பயன்படுத்தலாம். இம்மரத்தின் தழையைக் கொண்டு மல்பெரி பட்டுப்புழு வளர்க்கலாம். இவற்றிக்கெல்லாம் மேலாக தீப்பெட்டி மற்றும் தீகுச்சிகள் செய்திட இம்மரம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் இம்மரம் போதியளவு இல்லாததால், தமிழ்நாட்டிலுள்ள தீப்பெட்டித் தொழிற் சாலைகளுக்குத் தேவையான அய்லாந்தஸ் மரத்தின் குச்சிகள் அண்டை மாநிலங்களான கேரளா, குஜராத், இராஜஸ்த்தான் போன்ற வட மாநிலங்களிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டில் இம்மரத்தை நட்டு ஏன் மேற்படி பயனை நாம் அடையக்கூடாது இனி இம்மரத்தின் சாகுபடி விழைச்சல் விவரங்கள் பற்றி கீழே காண்போம்.

மரச்சாகுபடி குறிப்புகள்.

தமிழகத்தில் இம்மரத்தை கடற்கரை பகுதிகளிலிருந்து மெற்கு மலை தொடர்ச்சியின் அடிவாரத்திற்கு இடைப்பட்ட எல்லாப் பகுதிகளிலும் வளர்க்கலாம். மானாவரிப்பகுதிகள், செம்மண், சரளைப் பகுதிகளிலும் சுண்ணாம்பு நிலங்கள், கடற்கரை மற்றும் ஆற்றோறப்பகுதிகளிலும் இம்மரத்தை வளர்க்கலாம். காற்று அதிகமாகக்காணப்படும் பகுதியில் இம்மரங்கள் வேரோடு அல்லது மரங்கள் பாதியில் முறிந்து விழும் வாய்ப்புள்ளது. எனவே காற்று அதிகமுள்ள பகுதியில் இம்மரத்தை வளர்ப்பதைத்தவிர்க்கலாம். மானாவாரி விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் தோட்டங்களின் வேலி ஓரங்களிலும் இம்மரத்தை வளர்க்கலாம். தீப்பெட்டி தொழிலுக்குப் பயன்படுத்த இம்மரத்தை வெட்டினால் உடனே மரத்தை தீப்பட்டித் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் மேற்படி உபயோகத்திற்கு பயன் படுத்த முடியாத நிலை உருவாகலாம்.

விதை சேகரிப்பு.

மாசி, பங்குனி (பிப்ரவரி, ஏப்ரல்) மாதங்களில் நாற்றுக்களை முற்றிய நிலையில் மரத்திலிருந்தே பறித்திட வேண்டும். பின் நாற்றுக்களை நன்கு உலர்த்தி தடிகொண்டு அடித்த விதைகள் சேகரிக்க வேண்டும். ஒரு கிலோ எடையில் சுமார் 15000 விதைகள் கிடைக்கும். விதையின் மேல் தோலை நீக்கி விதையை உடனே ஊற்றும் பொழுது முளைப்புத் திறன் அதிகமாக இருக்கும்.

நாற்றங்கால்.

10 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 15 செ.மீட்டர் உயரமுள்ள தாய்பாத்தியில் விதைகளை பரப்பி முளைக்கச்செய்ய வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 15 கிராம் அளவில் விதைகளை விதைக்க வேண்டும். விதைத்த 10-12 நாட்களில் விதைகள் முளைக்க துவங்கி 50 நாட்ள் வரை முளைப்பு நீடிக்கும். விதையின் முளைப்புத்திறன் சுமார் 10-20 சதவிகிதமாகும் விதைகள் முளைத்து சுமார் 2 அங்குலம் உயரம் வரை வளர்ந்த நாற்றுக்களை சரிவிகிதத்தில் மண் கலவை நிரப்பப்பட்ட பாலிதீன் பைகளில் நட வேண்டும். விதைகளை நேரடியாகவும் பாலிதீன் பைகளிலும் ஊன்றலாம். இம்மரக்கன்றுகளை வெட்டிய மரஙிகளிருந்து கணுக்களைக் கொண்டும் நாற்றுக்களை உற்பத்தி செய்யலாம்.

நடவு.

சுமார் ஆறுமாதம் வளர்ந்த மரக்கன்றுகளை நிலங்களில் நடவு செய்யலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல் விவசாய நிலங்களின் வரப்பு ஓரங்களிலும், தேவைப்பட்டால் தனித்தோட்டமாகவும் சாகுபடி செய்யலாம். தண்ணீர் வசதியுள்ள பகுதிகளில் வருடத்தின் எக்காலத்திலும் இம்மரக்கன்றுகளை நடவு செய்யலாம். தரிசு மற்றும் மானாவரி நிலங்களில் பருவ மழைகாலங்களின் ஆரம்பத்தில் நடவு செய்வது நன்று 60 செ.மீ.கன அளவுள்ள குழிகளை மானாவரிப்பகுதிகளில்
4 x 4 மீட்டர் மற்றும் 3 x 3 மீட்டர் இடைவெளியில் மரக்கன்றுகளை நடவு செய்யலாம். குழிகளில் சுமார் அரைக் கிலோ மண்புழு உரம் 25 கிராம் வேர் வளர்ச்சி பூசணம் 20 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை பாதியளவு நல்ல மண் மற்றும் தொழு உரங்களால் நிரப்பி பின் வளர்க்க விரும்பினால் 3 மீட்டர் இடைவெளியில் மூன்று மரங்கள் வீதம் ஒவ்வொரு வரிசையிலும் நட்டு வளர்க்கலாம். இம்முறையைக் கடைபிடிப்பதன் மூலம் தண்ணீர் மழைகாலங்களில் சேகரிக்கப்பட்டு மரங்கள் வளர்வதற்கு உதவுகிறது. இம்முறையின் மூலம் ஏக்கருக்கு 444 மரங்கள் வரை வளர்த்து பயன் பெறலாம்.

மகசூல்.

மரங்கள் நடவு செய்த சுமார் 6-8 ஆண்டுகளில் மரங்களை அறுவடை செய்யலாம். தரிசு நிலத்தில் வளர்க்கப்பட்ட ஒரு மரத்திலிருந்து சுமார் 250 கிலோ எடை மரமும், நீர்வளமிக்க நிலத்தில் வளர்க்கப்பட்ட மரத்திலிருந்து சுமார் 500 கிலோ எடை மரமும் சுமார்
6-8 வருடங்கள் கழித்து கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு டன் மரத்தின் சராசரி மதிப்பு சுமார் ரூபாய் 1500 லிருந்து 1600 வரை தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்கலாம். குடியேத்தம் வாசன் தீப்பெட்டித் தொழிற்சாலை ஒப்பந்த சாகுபடிக்கும் வங்கிகள் மூலம் கடன் வசதியையும் செய்து கொடுக்கவுள்ளது.

மேலு ஒரு தகவல் -: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரைத் தாலூகாவில் ஓலைப்பட்டி என்ற கிராமத்தில் ஒரு நாள் ஒன்றுக்கு 450 டன் மரம், குச்சிகள் எரிபொருளுக்காக கீழ்கண்ட கம்பனிக்குத் தேவைப்படுகின்றது. நேரடி விற்பனை, உடனே கையில் செக் கொடுத்து விடுவார்கள் என்று திரு சாமுவேல் அந்த நிறுவனத்திலிருந்து வந்திருந்தவர் கூறினார் அவரது தொலை பேசி -: 9843318401 மற்றும்
-:9445006713.
நிறுவனம்:-
“SYNERGY SHAKTHI CAPTIVE ENERGY SYSTEM”

---------------------------------(விவசாயம் தொடரும்)

Thursday, January 8, 2009

மூங்கில் பயிர் பாதுகாப்பு.



மூங்கில் பயிர் பாதுகாப்பு.

பூச்சிகள் தாக்குதல் :-
கரையான்கள் :- வேர் பகுதிகளை கடித்து சேதத்தை உண்டாக்குகிறது.

வெள்ளைப் புழுக்கள் :- மண்ணிற்கு ஆடியில் இருக்கும் இவ்வண்டின் புழுக்கள் கிழங்கு பகுதிகளை கடிப்பதால் மரம் வறண்டு விடும்.

மடக்குப் புழு.

இப்புழுக்கள் இளநிலைக் காலங்களில் இலைகளை துளைத்தும் சற்றே வளர்ந்த பின் நீள்வாக்கில் மடக்கியும் இலைகளைத்தின்று சேதம் விளைவிக்கின்றன. மழை காலங்களில் இதன் சேதம் அதிகமாக இருக்கும்.


வெட்டுக் கிளிகள்.

இலைகளை கடித்து சேதம் உண்டாக்குகிறது.

ஹிஸ்பின் துளைப்பான்.

மழைக்காலங்களில் இலை சோகை இடுக்குகளில் இடப்படும் முட்டைகள் பொறித்தவுடன் மூங்கில் கணுக்களின் மேற்பரப்பை சுரண்டிவிடும். சோகைகள் உதிர்ந்தவுடன் கணுக்களில் துளையிட்டு குடைந்து சென்று சேதத்தை உண்டாக்கும். வளர்ந்த வண்டுகள் இலைத்துளிர்கள் தின்று வாழும்.

மூங்கில் அசுவினி.

இப்பூச்சிகள் நுனி குருத்துகளில் சாற்றை உறிஞ்சி சேத த்தை உண்டாக்கும். அதிக அளவில் இப்பூச்சிகளால் வெளிப்படுத்தும் சர்கரைத்துளிகள் மரங்களிங் படியும் இடங்களில் கருநிற பூசணங்கள் படர்ந்து ஒளிச்சேர்க்கை தடைபடும்.

தூர் கூன் வண்டுகள்.

இவ்வகை வண்டுகள் நுனி குருத்துகளை கடிப்பதால் மூங்கில் வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் புழுக்கள் மூங்கிலையும் குடைந்து சேதம் ஏற்படுத்துகின்றன.

பூச்சிகள்கட்டுப்பாட்டு முறைகள்.

கரையான் மற்றும் வெள்ளைப்புழுக்கள் :-
இப்பூச்சிகளை கட்டுப்படுத்த ஏதேனும் ஒரு குருணை மருந்தை மண்ணில் இடலாம். தூருக்கு 20 முதல் 50 கிராம் வரை இடலாம்.

இலை மடக்கு புழு மற்றும் வெட்டுக்கிளி :-
குளோரிபைரிபாஸ் 2 மில்லி லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

அசிவினி :-
டைமெதோயேட் அல்லது பாஸ்போமிடான் அல்லது மானோகுரோட்டோபாஸ் ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

மூங்கில் துளைப்பான் :-
சீரிய சாகுபடி முறைகளை மேற்கொள்வதன் மூலமும் மூங்கில் காட்டை சுத்தமாக பராமரிப்பதன் மூலமும் இப்பூச்சிகளின் தாக்குதலை தவிர்க்கலாம்.

நாவாய் பூச்சிகள் :-
இப்பூச்சிகளை கட்டுப்படுத்த டைமெதோவேட் அல்லது மீத்தைல் டெமெட்டான் ஒரு மில்லி/லிட்டர் நீர் என்ற அளவில் தெளிக்கலாம்.

நோய்கள்

1. மூங்கில் இலையுறை கருகல் நோய் :-

இலைஉறைகளில் முதலில் பழுப்பு நிற நீர் கோர்த்த புள்ளிகள் தோன்றும். இவை மிக வேகமாக பரவி இலையுறை முழுவதும் காய்ந்து விடும். இலையுறை களிமரத்திலிருந்து எளிதில் உரித்து விடலாம். நோயின் தீவிரம் அதிகரிக்கும் போது மூங்கில் களிகள் குருத்திலிருந்து கீழ் நோக்கி காய்ந்து விடும். இதனால் தரமான மூங்கில் உற்பத்தி பாதிக்கும்.

2. களி அழுகல் நோய்

இந்நோய் இளம் மற்றும் முதிர்ந்த மூங்கில் களிகளை தாக்குகிறது. பாதிக்கப்பட்ட மூங்கில் களிகளில் அடிபாகத்தில் முதலில் கரும்பழுப்பு மற்றும் கருப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின் வேகமாகப் பரவி தண்டுப்பகுதி பாதிக்கப்படும். பாதிக்கப்பட்ட கழிகளில் நீளவாக்கில் பிளவுகள் தோன்றும்.

3. மூங்கில் கிழங்கு அழுகல் நோய்.

இரண்டு வருடங்களுக்குட்பட்ட மரங்களை இந்நோய் தாக்குகின்றது. முதலில் கழிகளின் அடிப்பகுதிகளில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி கீழ்நோக்கிப் பரவி கிழங்கினைத் தாக்கி அழுகலை உண்டாக்கும்.

4. வேர் அழுகல் நோய்.

நோய் தாக்கப்பட்ட மரங்களின் வேர்களில் அழுகலை காணலாம். பாதிக்கப்ட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்து விடும். நோய் தாக்கப்பட்ட மரங்கள் மிக விரைவாகக் காய்ந்து வடும். காய்ந்த கழிகளின் அடிப்பகுதியில் காளான் தோன்றும்.

5. இலைக் கருகல் நோய்.

இலைகளில் முதலில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி காய்ந்து உதிர்ந்து விடும்.

6. துரு நோய்.

இலைகளில் முதலில் செம்பழுப்பு அல்லது சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவி மஞ்சள் நிறமாக மாறு உதிர்ந்து விடும்.

7. நச்சுயிரி நோய்.

இரண்டு வகையான நச்சுயிரி நோய்கள் காணப்படுகிறது. வெளிரிய பச்சை நிற கோடுகள் இலை நரம்புகளுக்கு இணையாக இலைகளில் தோன்றும்.

நோய் தீவிரமாகும் போது இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் உதிர்ந்து விடும்.

8. சிற்றிலை நோய்.

இந்நோயின் காரணி மைக்கோபிளாஸ்மா ஆகும். இந்நோயின் தாக்குதலால் இலைகள் சிறுத்து இடைக்கணுப்பகுதி வளர்ச்சி குறைந்து கொத்துக் கொத்தாகக்காணப்படும்.

ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாட்டு முறைகள்:

1. நோய்பூச்சிகள் தாக்குதலற்ற செடிகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
2. நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
3. நோயுற்ற இலையுறைகை அகற்றி விட வேண்டும்.
4. கிழங்கு அழுகல், வேர் அழுகல் மற்றும் கழி அழுகல் நோய்களைக் கட்டுப்படுத்த மரத்தினைச் சுற்றிலும் காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25 சதம் அல்லது கார்பென்டசிம் 0.1 சதம் மருந்தினை வேர்கள் நன்கு நனையும் படி மண்ணில் ஊற்ற வேண்டும்.
5. இலைக்கருகல் : மான்கோசெப் 0.25 சதம்.
6. துரு நோய் : நனையும் கந்தகம் 0.2 சதம் தெளிக்கவும்.
7. நச்சுயிரி நோய் மற்றும் சிற்றிலை நோய் தாக்கிய மரங்களை அகற்றி அழித்து விட வேண்டும்.


--------------------------------( மூங்கில் தொடரும் )